• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
காப்பி-Coffee

காப்பி செடி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

October 28, 2017 By Navinkumar V 1 Comment


18 Shares
Share18
Tweet
Share
+1

காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். காப்பிச் செடிப் பேரினம் ரூபியேசியே என்னும் குடும்பத்தை சேர்ந்தது.

ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் தான் இது முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எத்தோப்பியாவிலிருந்து எகிப்து மற்றும் எமன் நாட்டிற்கு பரவியது.

அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டில் பெர்சியா, துருக்கி மற்றும் வாடா ஆப்ரிக்காவிற்கு பரவி பின் அங்கிருந்து ஐரோப்பியாவிற்கும், பிறநாடுகளுக்கும் பரவியது.

காப்பி என்னும் சொல் ஆங்கில சொல்லாகிய coffee என்பதன் தமிழ் வடிவம் ஆகும். காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கோட்டையை பறித்து, பிறகு அரைத்துப் போடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.

பயிரிடும் முறை:
  • ஜூன் – டிசம்பர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்ற காலம் ஆகும்.
  • காப்பி தோட்டங்களின் மண் 4 .5 முதல் 6 .5 கார அமில நிலை கொண்டதாகவும், அதிக ஆழமுடையதாகவும், அதிக அங்கக பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் நல்லது. மணல் தவிர்த்து அணைத்து மங்களிலும் பயிர் செய்யலாம்.
  • இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்காக தனியாக அறுவடை செய்ய வேண்டும். தண்ணீரில் மிதக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையினை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்:
  • நல்ல வடிகால் வசதி உள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து பண்படுத்த வேண்டும். பாத்திகளை தேவையான அளவு நீளமும் 1 மீட்டர் அகலமும், 15 செ. மீ உயரம் இருக்குமாறு அமைக்க வேண்டும். 1 x 6 பரப்பளவுள்ள பாத்திகளுக்கு 5 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சுண்ணாம்பு இட வேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும்.
  • விதைகளை டிசம்பர் – ஜனவரி மாதங்களில் 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்க வேண்டும். அதன் பின்னர் மெல்லிய போர்வையாக மணல் இட்டு பின்பு வைக்கோல் கொண்டு மூட வேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினை கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினை கட்டுப்படுத்த வேண்டும். விதைத்த 45 வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின்னர் அவற்றினை பாலிதீன் பைகளில் நடவு செய்ய வேண்டும்.
விதைக்கும் முறைகள்:
  • நிழல் தரும் மரங்களை தவிர தேவையற்ற மரங்களை நீக்கி விட வேண்டும். சரிவான நிலப்பகுதிகளில் அடுக்குப் பாத்திகள் அமைக்க வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளிகளில் 45 x 45 x 45 அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளை நன்கு ஆறவிட்டு பின் மேல்மண்ணுடன் 500 கிராம் பாறை உப்பு இட வேண்டும்.
  • தயார் செய்துள்ள குழிகளில் செடிகளை நடவு செய்ய வேண்டும். செடிகள் பாதிக்காதவாறு பாலிதீன் பைகளில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.
  • காப்பிப் பயிரானது மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்.
  • ஒரு ஏக்கருக்கு ஒரு டன்னுக்கு மேல் மகசூல் தரக்கூடிய செடிகளுக்கு 200 கிராம் அளவுக்கு தழை, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஆண்டிற்கு இரண்டு முறை செடிக்கு 20 கிலோ தொழு உரம் இட வேண்டும்.
  • களைகளின் அளவை பொறுத்து களை எடுக்க வேண்டும். மேலும் காய்ந்த இலைகளை செடிகளின் வேர்பகுதிகளில் போடா வேண்டும். பருவ மழை முடியும் தருணத்தில் 1 அடி ஆழத்திற்கு கொத்தி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் இலை மற்றும் களைகள் மண்ணில் புதைந்து நன்கு மக்கி அங்க சத்துக்கள் செடிக்கு கிடைக்கும். காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி நீக்க வேண்டும்.
  • அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்கள் பழுத்த உடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பழங்களில் பழுக்காத காய்களை பிரித்து எடுக்க வேண்டும். இதனை தனியாக உலர வைத்து செர்ரி காபியாக பயன்படுத்த்தலாம்.
  • ஒரு எக்டரில் இருந்து 750 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்:
  • மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
  • காப்பி அருந்தாத நடுத்தர வயதினரை விட காப்பி அருந்துவதை வழக்கமாகக் கொண்ட நடுத்தர வயதினருக்கு மறதிநோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
  • காப்பி மன அழுத்தத்தை எதிர்த்து சிறப்பாக போராடும்.
  • இதில் உள்ள கார்பைன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

Filed Under: மலைத்தோட்டப் பயிர்கள் Tagged With: காப்பி

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog