• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
சர்க்கரை கொல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சர்க்கரை கொல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

April 16, 2018 By Navinkumar V 3 Comments


31 Shares
Share31
Tweet
Share
+1

சர்க்கரை கொல்லி யானது சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது.

இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது.

இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீகார் காடுகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

சர்க்கரை கொல்லி எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

இதன் இரகங்கள் ஆனது இலையின் அளவைப் பொருத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

சிறிய இலை வகை: 1.0-3.5 செ.மீ நீளம் மற்றும் 1.5-2.5 செ.மீ அகலமும் கொண்டது. மென்மையான இப்பயிரானது வறண்ட பகுதிகளில் காணப்படும்.

அடர்ந்த மற்றும் மெல்லிய ரோமங்களை கொண்ட வகை: 3-6 செ.மீ நீளம் மற்றும் 3.5 -5 செ.மீ அகலமும் கொண்டது. இவை கரும் பச்சை நிறத்திலும், மெல்லிய ரோமங்களையும் கொண்டது.

பருவம்

ஜீன் மற்றும் ஜீலை மாதங்கள் சாகுடி செய்ய ஏற்ற மாதங்கள் ஆகும்.

மண்

செம்மண் மற்றும் களிமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் 45x45x45மீ அளவுள்ள குழிகளை 2.5 மீ வரிசை இடைவெளி விட்டு எடுக்க வேண்டும்.

தயார் செய்துள்ள குழிகளை இலைகளால் நிரப்ப வேண்டும் மற்றும் மண்ணின் மேற்பரப்பில் குழிக்கு 2கிகி நன்கு மக்கிய உரம் இட வேண்டும். குழிகளில் பாசனம் செய்து ஒரு வாரம் ஆற விட வேண்டும்.

விதையளவு

விதைகள் அல்லது தாவரத் துண்டுகள் மூலம் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எக்டருக்கு 2-3 கிகி விதைகள் தேவைப்படும்.

இனப்பெருக்க முறைகள்

நவம்பர் – டிசம்பர் மாதங்களில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். இரவு முழுவதும் விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மணலுடன் கலந்த மண்ணில் தொட்டியில் நடவு செய்து தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். 40-50 நாட்களுக்குப் பிறகு விதைகளை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். 90 நாட்கள் ஆன பின் வயலில் நடவு செய்ய வேண்டும். இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறையாகும்.

தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு முதிர்ந்த தண்டுகளில் 15 செ.மீ நீளத்திற்கு வெட்டி அவற்றை 500 பிபிஎம் இன்டோல் ப்யூரிக் அமிலத்தில் 18 மணி நேரம் நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு இவற்றை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். தினமும் பாசனம் செய்ய வேண்டும். 90 நாட்களில் வேர்கள் உருவாகும்.

விதைத்தல்

90 நாட்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய பயன்படுத்த வேண்டும். தாவரங்களுக்கு இடையே 1.75 மீ இடைவெளி இருக்குமாறு தயார் செய்துள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 5-6 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில், நீர்ப் பாய்ச்சுவதை அதிகரிக்க வேண்டும்.

சர்க்கரை கொல்லி உரங்கள்:

ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 95 கிகி, மணிச்சத்து 45 கிகி மற்றும் சாம்பல் சத்து 35 கிகி கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை அளிக்க வேண்டும். இந்த உரங்களை இரண்டாக பிரித்தும் அளிக்கலாம். அடியுரமாக ஒரு பங்கும், நடவு செய்த முப்பது நாட்கள் கழித்து ஒரு பங்கு உரத்தை மேலுரமாகவும் இட வேண்டும்.

சர்க்கரை கொல்லி பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

நடவு செய்த ஒரு மாதத்திற்குள் ஒரு களை எடுக்க வேண்டும். அதன் பின் களைகளின் வளர்ச்சியை பொறுத்து கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இலைப்பேன்

இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 2 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பச்சை ஈ

இதனை கட்டுப்படுத்த மோனோகுரோடோபாஸ் 1மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 3கி அல்லது மேன்கோசேப் 2கி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

சர்க்கரைக்கொல்லியானது நடவு செய்த இரண்டு வருடத்தில் அறுவடைக்குத் வந்துவிடும். இலைகள் ஜீன் கடைசி வாரம் அல்லது ஜீலை முதல் வாரத்தில் பூக்க ஆரம்பித்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை பூக்களுடன் சேர்த்து கைகளால் அல்லது கத்தியால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட இலைகளை நிழலில் 7-8 நாட்கள் உலர்த்த வேண்டும். சூரிய ஒளியில் உலர வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கரில் 3-4 வருட பயிரில் இருந்து 10,000-15,000 உலர் இலைகளை அறுவடை செய்யலாம். நல்ல முறையில் பராமரிக்கப்படும் பயிரிலிருந்து ஒரு வருடத்திற்கு 10-15 டன் மகசூல் கிடைக்கும்.

சர்க்கரை கொல்லி பயன்கள்:
  • வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
  • உடல் மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.
  • எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
  • சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.
  • குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.
  • இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

Filed Under: மூலிகைப் பயிர்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Narayanaswamy says

    August 29, 2019 at 2:12 pm

    very useful tips.

    Reply
    • Navinkumar V says

      October 11, 2019 at 5:25 pm

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog