• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • September 23, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
தேயிலை-Tea

தேயிலை தோட்டம் அமைக்கும் முறைகள் மற்றும் பயன்கள்:

October 29, 2017 By Navinkumar V 3 Comments


25 Shares
Share25
Tweet
Share
+1

தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர்.

பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமத துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840 – 50 களில் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

இந்தியாவில் தேயிலை தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்திய திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது.

தேயிலையை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசிய, வியட்னாம், வங்காளதேசம், மல்லாவி, உகாண்டா, தான்சானியா,மலேசிய போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெரும்பாலும் உற்பத்தி செய்கின்றன.

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:
  • மே – ஜூன், செப்டம்பர் – அக்டோபர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
  • தேயிலை சாகுபடிக்கு சிறந்த அங்கக சத்துக்கள் நிறைந்த வடிகால் வசதியுடைய மண் நிலங்கள் சாகுபடிக்கு சிறந்ததாகும். மணல் தவிர்த்து அணைத்து வகையான மண்ணிலும் பயிர் செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 – 5.4 ஆக இருக்க வேண்டும்.
  • வடிகால் வசதியுடைய பொறை மண் வகைகள் நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். மண்ணின் கார அமில தன்மை 4.5 – 4 .8 வரை இருக்க வேண்டும். நாற்று உற்பத்திக்கு தேவையான மண்,மணல் போன்ற பொருட்களை கார அமிலத்தன்மை சோதனை செய்தபின் பயன்படுத்த வேண்டும்.
  • 200 அடர்த்தி, 10 செ.மீ அகலம், 30 – 45 செ.மீ நீளமுள்ள பாலிதீன் பைகளை தேர்வு செய்ய வேண்டும். பின் வடிகால் வசதிக்கு கீழ்பக்கத்தில் துளைகள் இட வேண்டும். முக்கால் பாகத்திற்கு மணல் மற்றும் மண் க்கலவையினை 1 : 3 விகிதத்தில் நிரப்ப வேண்டும். பின்பு மீதமுள்ள பகுதியில் 1 : 1 மணல் மற்றும் மணல் கலவையினை நிரப்ப வேண்டும். நிழல் பகுதியில் பைகளை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.
  • நோயற்ற, வீரிய வளர்ச்சியுடைய, நல்ல மகசூல் தரக்கூடிய தாய் செடிகளை தேர்வு செய்ய வேண்டும். நாற்று உற்பத்திக்கு மூன்று வாரத்திற்கு முன் 0 . 5 சதவிகிதம் அலுமினியம் சல்பேட், 1 சதவிகிதம் மெக்னிசியம் சல்பேட் கலவையும், இரண்டு வாரத்திற்கு முன்பாக துத்தநாக சல்பேட் கலவையும், கடைசி ஒரு வாரத்திற்கு முன்பாக 1 சதவிகிதம் உரிய தெளித்து நேர்த்தி செய்ய வேண்டும்.
  • தண்டு குச்சிகளை ஏப்ரல் – மே, ஆகஸ்ட் – செப்டம்பர் பாதங்களில் எடுக்க விடும். ஒரு இலை மற்றும் கணுக்குகளுடைய குச்சிகளை வெட்டி கீழ்ப்பகுதியில் சாய்வான வெட்டு கொடுக்க வேண்டும். பின்பு மண்கலவை நிரப்பிய பாலிதீன் பைகளுக்கு நீர் ஊற்றி நடவு செய்ய வேண்டும். குச்சிகள் 10 – 12 வாரங்களில் வேர்பிடிக்கத் தொடங்கும். பாலிதீன் பைகளை நிழல் வலை அமைத்து வைக்க வேண்டும். நடவு செய்து 90 நாட்களில் நிழல் வலைகளை நீக்கி விடலாம்.
  • வளர்ச்சியின் தன்மைக்கேற்ப நாற்றுகளை பிரித்து தாங்கு குச்சிகள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் 30 கிராம் நாற்றங்காலுக்குரிய கலவையினை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 4 சதுரமீட்டர் பரப்பளவுள்ள நாற்றுகளை இட வேண்டும்.
பயிரிடும் முறை:
  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். இதில் இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.
  • நடவின் பொழுது பாலிதீன் பைகளை நீள் வட்டத்தில் கிழித்து வேர்பாகம் உடையாமல் நடவு செய்ய வேண்டும். ஒற்றை வரிசை முறை / அடுக்கு முறையில் 1 .20 x 0 .75 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு எக்டருக்கு 10800 செடிகளை நடலாம்.
  • நிலங்களில் ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். கோடைகாலங்களில் இளவயது செடிகள் காயத்தை வண்ணம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • நடவு செய்த இரண்டாம் மாதம் முதல் உரமிட வேண்டும். ஒரு எக்டருக்கு ஆண்டிற்கு ஒருமுறை மணிச்சத்து தரும் பாறைஉப்பு 100 கிலோ இட வேண்டும். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இட வேண்டும். இரண்டாம் வருடம் தழைச்சத்து 250 கிலோ மற்றும் மணிச்சத்து 350 கிலோ உரங்களை பிரித்து வருடத்திற்கு 4 முறை இட வேண்டும்.
  • நடவு செய்த 3 – 5 மாதங்களில் நுனி தண்டினை 8 – 10 இலைப்பகுதி விட்டு வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகளின் வளர்ச்சியினை அதிகரிக்க முடியும். தேயிலை தோட்டத்தில் நிழலுக்கு மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும்.
  • நடவு செய்த மூன்றாம் ஆண்டில் அறுவடை செய்யலாம். அறுவடையின் பொது வளரும் மொட்டுடன் இரண்டு இலையை சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்.
  • ஒரு எக்டாரில் இருந்து 10 டன் தேயிலை கிடைக்கும்.
பயன்கள்:
  • நீரிழிவு மற்றும் இதய சம்மந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் ஆன்டி- ஆக்சிடென்டுகள் தேயிலையில் அதிகம்.
  • புற்றுநோய் உருவாக்கக்கூடிய செல்களின் வளர்ச்சியை தடுக்க பச்சை தேநீர் உதவுகிறது.
  • மனஅழுத்தம் ஏற்படக்கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்க உதவுகிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பச்சை தேனீர் உதவுகிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: மலைத்தோட்டப் பயிர்கள் Tagged With: தேயிலை

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. naleer says

    March 2, 2018 at 9:03 am

    தேயிலை நட கான் வெட்ட வேண்டுமா?

    Reply
  2. Sakthivel says

    March 21, 2023 at 2:05 am

    தேயிலை செடியினை நடும் முறையினை குறிப்பிடுக

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog