• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
பூசணிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

பூசணிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 24, 2018 By Navinkumar V 1 Comment


0 Shares
Share
Tweet
Share
+1
பறங்கிக்காய் (பூசணிக்காய்)

பூசணிக்காய் – பறங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று.

பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும்.

பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.

கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

மண்

அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

முதலில் தோட்டத்தை புழுதிபட உழவு செய்யவேண்டும். ஆறு அடி அகலத்தில் நீளமாக மேட்டுப்பாத்தி அமைத்து, பாத்திகளுக்கு இடையில் இரண்டு அடி அகல வாய்க்கால் விடவேண்டும். வாய்க்காலில் விதையை ஊன்றினால், ஈரமாகாத மேட்டுப்பாத்தியில் கொடிகள் படரும்.

விதையளவு

ஏக்கருக்கு 900 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை கேப்டான் அல்லது பெவிஸ்டின் பூஞ்சாணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து கொள்ளவும்.

விதைத்தல்

குழிகள் 30 x 30 x 30 செ.மீ என்ற அளவில் 2 x 2 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பின்பு குழிக்கு 5 விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

ஏழிலிருந்து ஒன்பது நாளில் விதை முளைத்து, இலைகள் துளிர்த்து விடும். ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

சாதாரணமாக, வறண்ட காலங்களில் வாரம் இருமுறையும், மற்ற காலங்களில் வாரம் ஒரு முறையும் பாசனம் செய்யலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்தால், தண்ணீர் செலவையும், களைகளையும் குறைக்க முடியும்.

உரங்கள்

விதைப்பயிருக்கு 22 கிராம் யூரியாவை நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.

10 கிகி தொழுவுரம், 100 கி தழைசத்து அடியுரமாக அளிக்க வேண்டும். நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு நைட்ரஜனை குழிக்கு 10 கி அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா எக்டருக்கு 2 கிகி மற்றும் சூடோமோனஸ் எக்டக்கு 2.5 கிகி அதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிகி கடைசி உழவிற்கு முன் அளிக்க வேண்டும்.

முதல் களைக்கு பின் ஒரு டேங்குக்கு 10 கிராம் பூச்சிக் கொல்லி (கார்பரில்) மருந்தைக் கலந்து, ஏக்கருக்கு 10 டேங்க் தெளிக்க வேண்டும். இரண்டாம் களைக்கு பின், ஒரு டேங்குக்கு 50 மில்லி பூச்சிக்கொல்லி (மோனோ குரோட்டாபாஸ்) கலந்து, ஏக்கருக்கு 15 டேங்க் தெளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம். மூன்றாவது வாரத்தில் கொடி படரத்தொடங்கும் போது முதல் களையும், 40-ம் நாள் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
அடிச்சாம்பல் நோய்

அடிச்சாம்பல் நோயை மேன்கோசெப் அல்லது குளோர்தலானில் 2 கி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த டைனோகேப் 1 மிலி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 3.0 சதவீதம் இலைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

அறுவடை

பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த பழங்களை நடவு செய்த 85 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்து விடலாம்.

மகசூல்

எக்டருக்கு 18 முதல் 20 டன் வரை கிடைக்கும்.

பயன்கள்
  • உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
  • நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.
  • இது இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இது தசை மண்டலம் பகுதிக்கு உறுதியை சேர்க்கிறது.
  • பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

Filed Under: காய்கறிகள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog