• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

July 15, 2018 By Navinkumar V 4 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

முள்சீத்தாப்பழம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழப்பயிராகும்.

அமேசான் காடுகள் தான் முள் சீதாவின் பிறப்பிடமாகும்.

தற்போது பல வெப்பமண்டல நாடுகளில் பரவி வருகின்றது.,

பிலிப்பைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகின்றது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

பழங்களின் சுவையைப் பொறுத்து இதய வடிவம், உருண்டை வடிவம், ஒழுகற்ற வடிவம் என்ற மூன்று வகைகளில் காணப்படுகின்றது. பென்னட் என்ற முள்சீத்தாப் பழம் தான் சிறந்த ரகமாகப் போற்றப்படுகிறது.

பருவம்

நல்ல சூரிய வெளிச்சம், நடுத்தர ஈரப்பதம், வெதுவெதுப்பான வெப்பநிலை உலர்ந்த காலநிலை உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முள்சீத்தா நன்றாக வளரும். கார்த்திகை மாதத்தில் நடவு செய்ய வேண்டும்.

மண்

நல்ல வளமான, ஆழமும், வடிகால் வசதியும் கொண்ட செம்மண், கரிசல் மண் வகைகள் ஏற்றது. இது மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 X 2 X 2 அளவுள்ள குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். குழிகளில் தொழு உரம் இட்டு குழிகளை ஆறப் போட வேண்டும்.

விதையளவு

விதை மூலமாகவும், மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் பயிர் செய்யலாம். ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் தெளிவான கன்றுகளை குழியின் மையப்பகுதியில் 5 மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்

வருடம் ஒரு முறை செடி ஒன்றிற்கு கலப்பு எரு 10 கிலோ இட்டால் போதுமானது. இதையே இரண்டாக பிரித்தும் அளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வருடம் ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இதில் பூச்சி தாக்குதல் எதுவும் இருக்காது. இதற்கென தனியாக பாதுகாப்பு முறைகள் தேவையில்லை. வேர் அழுகல் நோய் காணப்பட்டால் மட்டும் குருணை மருந்தை வேர் பகுதியில் வைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை

தீவு பகுதிகளில் வருடத்திற்கு மூன்று பருவங்கள் இம்மரம் பூப்பதால், மூன்று முறை அறுவடை செய்ய வேண்டும். மற்றப் பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தாமரம் பூக்கின்றது. ஜுன்-ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

முள் சீதாப் பழங்கள் உருவத்தில் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடை இருக்கும். ஒரு பெரிய பழத்தின் நீளம் சுமார் ஒரு அடியும், அகலம் அரை அடியும் இருக்கும். வடிவத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

பயன்கள்
  • சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
  • கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
  • அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
  • இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகவும், இயற்கையின் கொடையாகவும் முள்சீத்தாப்பழம் திகழ்கின்றது.

Filed Under: பழங்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. அ.கதிர் says

    August 4, 2019 at 2:10 am

    தெண்னையில் ஊடுபயிரா எதுலாம் பயிர்யிடலாம் ங்க குறிப்பா பழம் வகைகள் பத்தி சொல்லுங்க … நடவு செய்து இரண்டு வருட தெண்னை மற்றும் 10 வயதான தெண்னை இருக்கு …

    Reply
    • Navinkumar V says

      August 19, 2019 at 12:26 pm

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  2. கோபால் says

    August 18, 2021 at 5:50 pm

    முள்ளு சீதா பயிர் செய்வது மலை பகுதியில் மட்டும் தான் சாத்தியமா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog