• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
சணல் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

சணல் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

July 15, 2018 By Navinkumar V 1 Comment


0 Shares
Share
Tweet
Share
+1

சணல் – இதன் தாயகம் ஆப்ரிக்கா என்று கூறப்படுகிறது. இது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

பண்டைய காலத்திலேயே சணல் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திலேயே சணல் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த பொழுது சணல் வர்த்தகத்தை முதன்மையாக வைத்திருந்தனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சணலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இங்கிலாந்தில் அதிக விலைக்கு விற்று வந்தனர்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

ஒலிட்டோரியல் சணல் – ஜே.ஆர்.ஓ 524, 878, 7835, கேப்சுலாரிஸ் சணல் – ஜே.ஆர்.சி 212,321,7447 ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

மாசி – வைகாசி மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் கலந்த வண்டல் மற்றும் களிமண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது. கேப்சுலாரில் சணல் வகை நீர் தேங்கும் நன்செய் நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் ஒலிட்டோரியல் சணல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

விதையளவு

எக்டருக்கு வரிசை விதைப்பு முறையில் ஒலிட்டோரியல் 5 கிலோ, கேப்சுலாரிஸ் 7 கிலோ தேவைப்படும். தெளிப்பு முறையில் ஒலிட்டோரியல் 7 கிலோ, கேப்சுலாரிஸ் 10 கிலோ தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை மடக்கி உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஐந்து டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவு செய்ய வேண்டும். எக்டருக்கு 20 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

ஒலிட்டோரியல் இரகங்களுக்கு 25 x 5 செ.மீ இடைவெளியும், கேப்சுலாரிஸ் இரகங்களுக்கு 30 x 5 செ.மீ இடைவெளியும் விட்டு வரிசை விதைப்பு முறை அல்லது தெளிப்பு முறையில் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஒவ்வொரு முறையும் களை எடுத்த பின்பு அல்லது 20-25 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும். வறட்சியான காலங்களில் 8 கிலோ யூரியாவை 2 சத கரைசலாக ஒரு லிட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் 40-45 நாளிலும் மற்றும் 70-75 நாளிலும் தெளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

விதைத்த 20-25 நாட்களில் ஒரு முறையும், 35-40 நாட்களில் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். இல்லையெனில் புளுகுளோரலின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளித்து, உடனே நீர்ப்பாய்ச்சவேண்டும். இதைத் தொடர்ந்து 30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுத்தால் போதுமானது.

பயிர் பாதுகாப்பு

இதில் பெரும்பாலும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை

சணல் சாதாரணமாக 100 – 110 நாட்களில் அறுவடைக்கு வரும். நமது தேவைக்கேற்ப 135 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட சணல் செடிகள் வயலில் 3-4 நாட்கள் பரப்பப்பட்டு இலைகளை உதிர்த்தி வைக்க வேண்டும். அதன் பிறகு மெல்லிய மற்றும் உருண்ட தண்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக கட்ட வேண்டும்.

மகசூல்

ஒரு எக்டரில் கிடைக்கும் செடிகள் 45-50 டன்கள் வரை எடை உள்ளது. இதிலிருந்து எக்டருக்கு சுமார் 20-25 டன் சணல் கிடைக்கும்.

பயன்கள்
  • சணல் மூலம் செய்யப்படும் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. எனவே பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளை உபயோகிக்கலாம்.
  • சணல் முக்கியமாக கச்சா பருத்தியின் பேல்களை உருட்டி மடக்கவும், சாக்குப் பைகள் மற்றும் துணி உற்பத்திச் செய்யவும், கரடுமுரடான துணிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் இழைகள் திரைச்சீலைகள், நாற்காலி உறைகள், தரை விரிப்புகள், தள விரிப்புகள், ஹெஸ்ஸியன் துணிகள் நெய்யப் பயன்படுகிறது.
  • இழைகள் தனியாகவோ அல்லது இதர வகை இழைகளுடனோ இணைத்து கடுநூலையும், கயிறையும் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

Filed Under: இதர சாகுபடி

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog