• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 19, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

March 14, 2025 By Navinkumar V Leave a Comment


0 Shares
Share
Tweet
Share
+1

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் பயன்படும் சித்தரத்தை பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகையாகும். பன்னெடும் காலமாக தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். கிழக்கு ஆசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கிறார்கள்.

தமிழ் பெயர்: சித்தரத்தை

தாவரவியல் பெயர்: Alpinia galanga

குடும்பம்: Zingeberaceae

சித்தரத்தையின் வகைகள்

சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சிறிய சித்தரத்தை மற்றும் பெரிய சித்தரத்தை (பேரரத்தை). இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இது மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற கிழங்கு வகையை சேர்ந்தது மற்றும் மருத்துவத்தில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

வளர்ச்சி மற்றும் தோற்றம்

சித்தரத்தை எல்லா நிலங்களிலும் வளரக்கூடியது. செம்மண் கலந்த சரளையில் நன்கு வளரும். இது ஒரு செடி வகையை சேர்ந்தது. இதன் தாயகம் தெற்கு ஆசியா, பின் மலேஷியா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியுள்ளது.

இது இஞ்சி வகையை சார்ந்த குறுஞ்செடியாகும். சுமார் 5 அடி உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். கிழங்குகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும்.

இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்கவாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழங்குதான் மருத்துவ குணம் கொண்டது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். கிழங்குகள் குறுமிளகின் வாசனையுடன் இருக்கும். இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இதன் பக்க கிழங்குகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தையும் ஒன்றாகும்.

சித்தரத்தை மருத்துவ பயன்கள்:

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், இழுப்பு, இருமல், வீக்கம், காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் அதிக திறன் மிக்கது.

சித்தரத்தைகிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்து பக்குவப் படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் எனப்படும் அல்சரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணையை குணப்படுத்தும்.

நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்யுவதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னகம் எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம், சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தை அரைத்து தேனில் குழைத்து கொடுக்க இருமலும் இயல்பாக குறையும்.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால், இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதை பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

ஆஸ்த்மா பாதிப்பால் ஏற்படும் இழுப்பு, இருமல் மற்றும் மூச்சிரைப்பு உள்ளவர்கள் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். மேலும் சளி தொல்லையும் நீங்கி விடும்.

இடுப்பில் தண்டுவட எலும்புக்கள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி உலர்ந்த சித்தரத்தை அதில் வைத்து தேய்த்து சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து தண்ணீர் சிறிது கலந்து கொதிக்க வைத்து அந்த கலவையை இளஞ்சுட்டில் இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவி வர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

முதுமையின் பாதிப்பால், உடலில் வியாதிகள் ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி குறைந்து, கை கால் மூட்டுகளில், எழும்புகளின் இணைப்பில் வலிகள் தோன்றும், இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்கார நடக்க முடியாமல் சிரமப்படுவர். இந்த பாதிப்பு நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப் பொடியை சிறிதளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில் சாப்பிட்டு வர வெகுநாட்கள் துன்பம் தந்த வலிகள் எல்லாம் குணமாகும். எலும்புகளின் ஆற்றல் அதிகரிக்கும். உடலுக்கு சக்தியை அதிகரிக்கும்.

இருமல் ஏற்படும் போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும். உடல் சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், பனங்கற்கண்டு சிறிது கலந்து சுவைக்கவேண்டும். இது இருமலை போக்கும் சிறந்த மருந்து.

குழந்தைகளின் மாந்தம் எனும் பால் செரியாமை, இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக. உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணெயில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைகுழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக் கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.

சித்தரத்தை சிறந்த மணமூட்டி, சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும், ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் குணமாகும். நோய்கள் வரும்போது சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மேற்கண்ட மருத்துவ முறைகளை பின்பற்றவும். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.

வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

இந்த மூலிகை வீட்டின் பின்புறம் அல்லது நிழல் பகுதியில் வளர்க்கலாம். தோட்டங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற மூலிகையாகும்.

Filed Under: மருத்துவ பயன்கள், மூலிகைப் பயிர்கள் Tagged With: சித்தரத்தை

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog