உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த பயிர் கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் முதன்முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போது கோதுமை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
உலக அளவில் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு விளைவிக்கப்படும் தானியம் கோதுமை ஆகும். கோதுமைக்கு மிதமான பருவநிலை ஏற்றது, எனவே தமிழ்நாட்டில் குளிர்ந்த காலநிலை மலை பிரதேசமான நீலகிரி, கொடைக்கானல்,சேர்வராயன் மலை , ஏற்காடு, ஜவ்வாது மலை அடிவாரங்களில் இன்றளவும் கோதுமை பயிரிடப்படுகிறது. இந்திய அளவில் பஞ்சாப் மாநிலம் கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
பயிரிடும் முறை:
- நவம்பர் – டிசம்பர் மாதங்கள் கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பருவங்கள், இந்த காலநிலைகளில் பயிரிடும்பொழுது நல்ல மகசூலை பெறலாம்.
- வண்டல் மற்றும் கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற மண் வகைகள் ஆகும்.
- பயிரிடப்படும் நிலத்தை நன்கு உழுது மண் கட்டிகள் இல்லாதவாறு செய்யவேண்டும். பின்பு பாதிகளாக பிரித்து கொண்டு அந்த பாத்திகளுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும்.
- ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40 – 45 கிலோ அளவுள்ள விதைகளை பயன்படுத்த வேண்டும். நிலத்தை உழுது சரிசெய்யும் பொழுது 100 கிலோ தழைச்சத்து மற்றும் 50 கிலோ அளவுள்ள தொழு உரம் பயன்படுத்தி நிலத்தை தயார்படுத்த வேண்டும்.
- சுமார் 20 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்திற்கு கோடுகளை போட்டு அதில் கோதுமை விதைகளை இடவேண்டும். பின்பு களைக்கொத்தி உதவியுடன் மண்ணை கொண்டு அக்குழிகளை மூடி நீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
- அதிக அளவிலான பராமரிப்பு தேவை இல்லை. 30 – 40 நாட்கள் கழித்து தேவையற்ற களைகளை நீக்கி சுமார் 30 கிலோ அளவுள்ள தழைசத்துக்களை இட்டு நீர் பாய்ச்சினால் போதுமானது.
- பயிரிட்ட 75 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். நன்கு காய்ந்த நிலையிலுள்ள கோதுமை தாள்களை அறுவடை செய்து அவற்றை நன்கு காயவைத்து கோதுமை மணிகளை பிரித்து எடுக்கவேண்டும். பிரித்தெடுக்கும் முறையை கைகள் மூலமாகவும், இயந்திரம் மூலமாகவும் பிரித்தெடுக்கலாம்.
- ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டால் 5000 கிலோ அளவு மகசூலை பெறலாம்.
- இயற்கை தழை உரம், மண்புழு உரம் கலந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் பொழுது நல்ல விளைச்சலை பெறலாம்.
கோதுமையின் பயன்கள்:
- கோதுமை உடலுக்கு பலத்தை அளிக்க கூடிய தானியம் ஆகும். காய்ச்சல் இருக்கும் பொழுது கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருட்களை உண்ணும்பொழுது இழந்த பலத்தை மீண்டும் பெறலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவாகும்.
- உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கோதுமை மாவு பசை போல் செய்து அதை கட்டிகள் மேல் வைத்து கட்டும் பொழுது கட்டிகள் குணமாகும்.
- அஜீரணம் மற்றும் அடிக்கடி ஏப்பம் வருபவர்கள் கோதுமை ரவை கஞ்சி செய்து பருகும் பொழுது உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
முனைவர். கரிகாலன் says
75 முதல் 90 நாட்கள் தவிர மற்ற நாட்களில் நிலத்தை என்ன செய்வார்கள்
Navinkumar V says
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
மாரிமுத்து.க.பெ says
ஏறக்குறைய மலை பிரதேசங்களில் மானாவாரி பயிராகத்தான் பயிரிடப்பட்டு இருக்கிறது. மற்ற காலங்களில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு இதுபோன்ற பயிர்களை விளைவிப்பர்.
அய்யப்பன் says
தஞ்சாவூர்.திருவாரூர் மாவட்டம் பயிர் செய்ய முடியுமா.