• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
கோகோ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

கோகோ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 24, 2018 By Navinkumar V 1 Comment


0 Shares
Share
Tweet
Share
+1

தியோபிரமா கோகோ என்கிற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள கோகோ பயிரானது, ஸ்டெர்குலியேஸி குடும்பத்தைச் சார்ந்தது.

கோகோ தென் அமெரிக்கா நாட்டின் அமேசான் ஆற்றுப் படுகையை தாயகமாக கொண்டது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது சுமார் கி.மு 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்பினார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்றும் அழைக்கப்பட்டது.

உலகளவில் கோகோவானது சாக்லெட், உணவுப் பொருட்கள், சுவை மிகுந்த பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோகோவின் தேவையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் தேவையானது உற்பத்தியின் அளவை விட அதிகமாக இருப்பதால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கிரையல்லோ (Criollo) மற்றும் ஃபாரஸ்டிரோ (Forestero) ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இதில் ஃபாரஸ்டிரோ வகைகள் இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

பருவம்

மார்கழி-தை மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது வண்டல் மண்ணில் 15 டிகிரிலிருந்து 39 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடத்தில் கோகோ நன்கு வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 அளவிற்கு குறையாமலும் 8.0 அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். கோகோ மரக்கன்றுகளை நடவு செய்ய 1.5 அடி ஆழம், நீளம் மற்றும் அகலமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளை எடுத்து ஒரு மாத காலத்திற்கு ஆற விட்டு மண், மற்றும் தொழு உரத்தை 3:1 என்கிற விகிதத்தில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.

விதையளவு

அதிக விளைச்சல் கொண்ட தாய் மரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒட்டு ரகத்தேர்வுகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு அதிக பட்சமாக 200 கோகோ செடிகளை சாகுபடி செய்யலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் கோகோ மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவின் போது கோகோ நாற்றின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணின் மேல்பரப்பும், பூமியின் மேல்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்தபின் கைகளால் நாற்றினை சுற்றி மண்ணை அணைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கால்களால் நாற்றினை சுற்றி மிதிக்க கூடாது.

இதற்கு 50 முதல் 60 சதம் வரை சீரான நிரந்தர நிழல் தேவைப்படும். எனவே தென்னை, பாக்கு தேப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். 25 அடி மற்றும் அதற்கு அதிகமான இடைவெளியில் வளர்க்கப்படும் தென்னையில் இரண்டு தென்னை வரிசைக்கு இடைவெளியில் 10 அடி இடைவெளியிலும், இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோகோ செடியையும் நடவு செய்யலாம்.

பாக்கு தோப்பில் இரண்டு பாக்கு மர வரிசைக்கு இடைவெளியில் 16 அடி இடைவெளி விட்டு கோகோ மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

கன்று நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். கோகோ பயிருக்கு ஆண்டு முழுவதும் மண்ணில் ஈரப்பதம் சீராக இருக்குமாறு பராமரிக்க வேண்டும். கோடை காலங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு 20 லிட்டர் நீர் பாசனம் தேவைப்படுகிறது. சொட்டு நீர் மூலமாகவோ அல்லது வாய்கால் மூலமாகவோ நீர்பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 220 கிராம் யூரியா(தழைச்சத்து), 250 கிராம் சூப்பர் பாஸ்பேட்(மணிச்சத்து) மற்றும் 240 கிராம் பொட்டாஷ்(சாம்பல் சத்து) உரங்களை இட வேண்டும்.

முதல் வருட செடிகளுக்கு மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் ஒரு பாகம் அதாவது 75 கிராம் யூரியா, 85 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 80 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகமாக பிரித்து நடவு செய்த நாளிலிருந்து 6 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

இரண்டாவது வருடம், மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் இரண்டு பாகம் அதாவது 145 கிராம் யூரியா, 165 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து நடவு செய்த நாள் முதல் 6 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

மூன்றாவது வருடம், கோகோ செடிகளுக்கு வருடம் ஒன்றிற்கு 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 240 கிராம் பொட்டாசியம் ஆகிய உரங்களை மூன்று சம பாகங்களாக பிரித்து 4 மாத இடைவெளியில் இட வேண்டும்.

கோகோவில் உலர்ந்த விதைகளின் விளைச்சல் 2 கிலோ அளவிற்கு வந்தவுடன் மூன்றாவது வருடம் தந்த உர அளவை இரட்டிப்பாக்கி நான்கு பாகங்களாக பிரித்து 3 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துக்கள்

கோகோவில் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு மற்றும் துத்தநாக குறைபாடுகள் காணப்படுவதால் வருடத்திற்கு இரண்டு முறை 0.5 சதவிகித அளவில் துத்தநாக சல்பேட் மற்றும் அன்னபேதி உப்பு கரைசலை கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

கோகோ செடிகள் மரங்களாகும் வரை செடிகளைச் சுற்றி களைச்செடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செடிகளை நட்ட இரண்டாவது வருடத்தில் செடியின் முக்கிய தண்டில் தோன்றும் போத்துகளை அவ்வப்போது கிள்ளி நீக்கி விட வேண்டும். செடிகளின் கிளைகளை குடை வடிவத்தில் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். செடிகளை நட்ட மூன்று ஆண்டுகள் கழித்து நோய் தாக்கப்பட்ட, மற்ற காய்ந்த கிளைகளை நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் விசிறி கிளைகளிலிருந்து மேல் நோக்கி வளரும் போத்துகளை கூர்மையான கத்தி கொண்டு வெட்டி விட வேண்டும். வெட்டிய பாகத்தில் தாமிர பூசண கொல்லி பசையைத் தடவ வேண்டும். நோய் மற்றும் பூச்சிகள் தாக்கப்பட்ட காய் மற்றும் பழங்களை கூர்மையான கத்திக்கொண்டு பூ மெத்தை (Cushion) பாதிக்கப்படாத வண்ணம் நீக்கி அழிக்க வேண்டும்.

பராமரிப்பு

கோகோ நடவு செய்யப்பட்ட இடங்களில் வெளிப்புற வரிசையில் அமைந்துள்ள செடிகளுக்கு கூடுதலாக நிழல் விழுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தென்னை மட்டையின் நுனி பாகத்தை வெட்டி செடியின் அருகே நடுவதன் மூலம் தற்காலிக நிழலைத் தரலாம். இது தவிர, வாழை கன்றுகளை நடவு செய்து கோகோ செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம்.

கோகோ அதிக இலைகளை உற்பத்தி செய்யும் மரமாகும். வளர்ந்த கோகோ மரங்களிலிருந்து வருடந்தோறும் 800 கிலோ இலைகள் உதிர்ந்து மக்கி மண்ணுக்கு உரமாக கிடைக்கின்றன. உதிரும் இலைகளை மண்ணுக்கு மூடாக்காக பரப்பி மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கலாம்.

பூக்கும் பருவம்

கோகோ செடிகள் நட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டிலிருந்து பூக்கத் துவங்கும். மரத்தின் முக்கிய கிளை மற்றும் விசிறி கிளைகளில் கொத்தாக பூக்கள் உருவாகும். ஒவ்வொரு பூ கொத்திலும் 10-20 பூக்கள் இருக்கும். ஒரு மரத்தில் பல ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்தாலும் அவை அனைத்தும் காயாக மாறாது. பொதுவாக மே – ஜீன் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அதிகளவில் பூக்கள் தோன்றும்.

பயிர் பாதுகாப்பு
மாவுப்பூச்சி

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த 2 மி.லி ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தொடர்ந்து காணப்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த உதிர்ந்து விழுந்துள்ள பூ மொட்டுகள் மற்றும் இளங்காய்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும். இளம் தளிர் பருவத்தில் 2 மி.லி குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் 2 மி.லி ரோகார் (டைமித்தோயேட்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அத்துடன் 30 கிராம் யூரியாவையும் கலந்து கோகோச் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இளம் காய் பருவத்தில் 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தையும், 30 கிராம் யூரியாவையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

வேர்ப்புழுக்கள்

இந்த வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள கோகோ கன்றுகளைச் சுற்றி ஒரு செடிக்கு 10% செவின் தூளை (10 கிராம்) இட வேண்டும். வளர்ந்த செடிகளில் இப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் 50% மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, மரத்தை சுற்றியுள்ள மண்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

செந்நிறத் தண்டுத் துளைப்பான்

இப்பூச்சியின் இளம் புழுக்கள் முதன்மைத் தண்டில் ஜார்க்கட் பகுதிக்கு சற்று கீழே, தண்டைத் துளைத்துச் சென்று சேதம் ஏற்படுத்துகின்றன. அதனால் முதன்மைத் தண்டின் மேற்பகுதி முழுவதும் காய்ந்து விடுகிறது. விசிறிக் கிளைகளில் இப்புழுக்களின் தாக்குதலால் இலைகள் காய்ந்து, கிளைகள் ஒடிந்து விடுகின்றன.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய பாகங்களை வெட்டி எரித்துவிட வேண்டும். 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரங்களின் மீது தெளிக்க வேண்டும்.

அசுவினி தாக்குதல்

அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் ஜீலை முதல் ஜனவரி வரை அதிக அளவில் காணப்படும். இப்பூச்சிகள் தாக்கிய மரங்களில் எறும்புகள் நடமாட்டம் காணப்படும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1.5 மி.லி ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

இலைகளைத் தின்னும் புழுக்கள்

இப்புழுக்களின் தாக்குதல் ஜீன்-ஜீலை மாதங்களில் குருத்து இலைகளில் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்களை அழிப்பதற்கு 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நிற கூன் வண்டுகள்

இவ்வண்டுகளின் புழுக்கள் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. எனவே இவைகளைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை, 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தைச் சுற்றியுள்ள மண்பகுதி முழுவதும் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.

காய் துளைப்பான்

இப்புழுக்களை அழிப்பதற்கு 2 மி.லி மோனோகுரோட்டோபாஸ் மருந்து அல்லது 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கருங்காய் நோய்

காய்ந்த மற்றும் நோய் தாக்கிய காய், பழங்களை அகற்ற வேண்டும். நிழலை குறைத்து நல்ல காற்றோட்டம் ஏற்படுமாறு செய்ய வேண்டும். போர்டோகலவை ஒரு சதம், மழைக்கு முன் ஒரு முறையும் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

வெள்ளை நூற்கருகல்

தேவைக்கு அதிகமாக நிழல் படாமல் இருக்க வேண்டும். போர்டோகலவை ஒரு சதம் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு (0.3%-3 கிராம் மருந்து 1 லிட்டர் நீர்) கலவையை மழைக்கு முன்பு ஒரு முறையும் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

கேங்கர் நோய்

இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட காய்களைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். கோகோ தோட்டத்தில் முறையான வடிகால் வசதிகள் செய்ய வேண்டும். இந்நோயின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சிறிதளவு செதுக்கி விட்டு போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

அறுவடை

செடிகள் நட்ட மூன்றாவது வருடம் முதல் காய்க்க துவங்கும். பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ச்சி அடைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாறும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் காய்களை அறுவடை செய்யும் பொழுது பூ மெத்தை (Cushion) பாதிக்கப்படாத வகையில் கத்தியால் காம்பு பகுதியில் வெட்டி அறுவடை செய்ய வேண்டும்.

விதைகளை பிரித்தெடுத்தல்

அறுவடை செய்த காய்களை நிழலில் 5 முதல் 6 நாட்கள் குவியலாக குவித்து சீராக பழுக்க வைக்க வேண்டும். இந்த பழங்களின் விதைகளில் உள்ள அமிலத்தன்மை குறைந்து வாசனைத் தன்மை ஏற்படும். மேலும் உலர் விதையின் எடையும் அதிகரிக்கும். நன்றாக பழுத்த பழங்களை சிறிய தடி கொண்டு தேங்காய் போல் சரிபாதியாக உடைத்து விதைகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். காய்களை உடைக்கும் பொழுது விதைகள் நசுங்காதவாறு கையாள வேண்டும். கோகோ பழங்களிலிருந்து பிரித்தெடுத்த சதைப்பற்றுடன் கூடிய விதைகளை நொதிக்க வைத்து பதப்படுத்த வேண்டும். விதைகளை சுற்றியுள்ள வழவழப்பான சதையை நீக்கவும், முளையை கொல்லவும், விதையுறையை இளக்கவும், கசப்புத் தன்மையை குறைத்து மணம் மற்றும் சுவையை கூட்டவும் நொதித்தல் செய்யப்படுகிறது.

நொதிக்க வைத்தல்
கூடைமுறை நொதித்தல்

மூங்கில் கூடைகளை பொருத்தமான அளவில் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியில் சதை கூழ் வடிந்து போகுமாறு அமைக்க வேண்டும். இதற்காக வாழை இலையை கூடையினுள் பரப்பி அதன் மேல் விதைகளை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியை வாழை இலையை கொண்டு மூடி கனமான பொருளை வைத்து சதை வியர்ப்புகள் நன்கு வடியும் வகையில் சற்றே உயரமான தளத்தில் வைக்க வேண்டும். மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் நன்றாக கிளறிவிட்டு வாழை இலை கொண்டு மூட வேண்டும். 5-6 நாட்களில் முழுவதுமாக நொதித்த பின் உலர்வதற்காக விதைகளை வெளியே எடுக்க வேண்டும். ஊதா நிறமாக இருக்கும் விதையின் உட்புறம் காப்பி நிறமாக (brown) மாற துவங்கும்.

பெட்டி முறை நொதித்தல்

அதிக அளவிலான விதைகளை நொதிக்க வைக்க பெட்டி முறை நொதித்தல் பயன்படுத்தப்படுகிறது. 120 x 95 x 75 செ.மீ அளவுள்ள மரப்பெட்டிகளை கொண்டு நொதிக்க வைக்கப்படுகிறது. சதைக்கூழ் வழிந்து போகும் வகையிலும், காற்றுச் சுழற்சி ஏற்படும் வகையிலும் சட்டங்களைக் கொண்டு பெட்டியின் அடிப்பகுதியை வடிவமைக்க வேண்டும். விதைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதில் மாற்றும் வகையில் நகரும் அடுக்குகளாக இப்பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். குறைந்த அளவு மூன்று பெட்டிகள் வரிசையாக இருக்குமாறு அமைக்க வேண்டும். பெட்டிகளில் விதைகளை நிரப்பி அதன் மேல் பகுதியினை வாழை இலை அல்லது சாக்குப்பைகளை கொண்டு மூடிவிடவேண்டும். மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் விதைகளை நன்றாக கிளறிவிட வேண்டும். பெட்டிகளில் வைத்த 7 நாட்களுக்குப் பிறகு விதைகளை எடுத்து உலர்த்த வேண்டும்.

சேமித்தல்

முற்றிலும் நொதித்த விதைகளை சூரிய ஒளியில் சுத்தமான களத்தில் சீராகப்பரப்பி 7-10 நாட்கள் உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது தினந்தோறும் நன்றாக கிளறிவிட வேண்டும். மழைக் காலங்களில் உலர்த்திய விதைகளை ஈரம் படாமல் பராமரிக்க வேண்டும். இவ்வாறு உலர்த்தப்பட்ட விதைகளை சுத்தமான சாக்குப் பைகளில் நிரப்பி காற்று, ஈரப்பதம் இல்லாத அறையில் சேமிக்க வேண்டும். சாக்குப் பைகளை தரையில் வைக்காமல் மரக்கட்டைகளின் மேல் அடுக்கி வைக்க வேண்டும்.

மகசூல்

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கருக்கு 3-ம் ஆண்டில் இருந்து 300 கிலோ விதைகள் வரை கிடைக்கும்.

ஊடுபயிர்

இதற்கு நிழல் அவசியம் என்பதால் தென்னையை ஊடுபயிராக பயிரிடலாம்.

பயன்கள்
  • கோகோ உலகளவில் சாக்லெட், உணவு பொருட்கள் மற்றும் சுவை மிகுந்த பானங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • மருத்துவ பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சருமத்தில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதால் இந்த கோகோ வெண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக விளங்குகின்றது.
  • இந்த கோகோ வெண்ணெய் உபயோகிப்பதால் சருமமானது பருக்கள், வடு மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருந்து விலகியே இருக்கும்.

Filed Under: இதர சாகுபடி

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog