🌿கற்பூரவள்ளி (Karpooravalli)
கற்பூரவள்ளி அறிமுகம்
கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது பரவலாக அறியப்படும் மருத்துவ மூலிகை. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இயல்பாக வளர்கிறது. சிறிய புதர் போன்ற இச்செடி வாசனை மிக்க தடிமனான இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகள் பற்கள் போல சிறிய வளைவுகளைக் கொண்டிருக்கும். இவை மெல்லிய ரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
தாவரத்தின் அமைப்பு
கற்பூரவல்லியின் இலைகள் மெல்லிய முட்களுடன் காணப்படும், இவை தடிமனாகவும் சுவைமிக்கதுமானது. கசப்பும் காரத்தன்மையும் மிதமான வாசனையும் இதன் இலைகளின் தனிச்சிறப்பு. மலர்கள் ஊதா நிறத்துடன் பூக்கும்.
பெயர் விளக்கம்
இந்த மூலிகையின் பெயர் அதன் வாசனையிலிருந்து உருவானது. மணம் மிக்க இலைகளை உடையதால் “கற்பூரவல்லி” எனப் பெயர் பெற்றது. “கற்பூரம்” என்பது மணமிக்க பொருட்களை குறிக்கும், “வள்ளி” என்பது செடி என்பதைக் குறிக்கும். மேலும், நோய்களை விரைவாக விரட்டும் தன்மை காரணமாக “வல்லி” (விரைவு) என்ற அர்த்தத்திலும் பெயர் பொருந்துகிறது.
மருத்துவப் பயன்பாடுகள்
கற்பூரவல்லி ஒரு இயற்கை மருந்தாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளை அரைத்து சாறு வடிவில் குடிப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்ற நோய்கள் குறைகின்றன. குளிர் மற்றும் மூச்சுக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். சிறு குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலை சாறு சிறிது தேனுடன் கொடுக்கப்படுவது வழக்கம்.
வளர்ப்பு முறை
மாடித்தோட்டம் அல்லது சட்டி தோட்டம் ஆகியவற்றில் எளிதாக வளர்க்கலாம். வெயிலும் நிழலும் மிதமான இடம் சிறந்தது. ஈரத்தன்மை மிதமான மண்ணில், கிளை துண்டுகளை நட்டு எளிதாக பெருக்கலாம். அதிக நீர் தேவையில்லை; வாரத்தில் இரண்டு முறை நீர் போதுமானது.
கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
வேறுபெயர்கள் – ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?

- கற்பூரவள்ளி இலை – 5
- டீ தூள் – 1 tsp
- தேன் – தே.அ
- தண்ணீர் – 2 கப்
- எலுமிச்சை சாறு – 1 tsp
- இஞ்சி – 1/2 துண்டு
- மிளகு – 4
- ஏலக்காய் – 1
செய்முறை :
கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீ தூளை போட்டு கொதிக்க வையுங்கள்.
பின்பு அதில் கற்பூரவள்ளி இலையையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். பின்பு இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி அதில் போடுங்கள். அதன்பின்னர் ஏலக்காயை இடித்து அதில் போடுங்கள். நன்கு கொதித்த பின்னால் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு டீ கோப்பையில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து குடியுங்கள். மாலை வேளையில் இதனை தயார்செய்து குடித்து பயனடையுங்கள்.
கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்:
- கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
- வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
- இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
- இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
- இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
- இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
- இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
- கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
- தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
- மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
- சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
- குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்

நற்காரியம் செய்கிறீர்கள். நன்றி.
கற்பூரவள்ளி செடி எந்த வகை மண்ணில் வளரும்?
அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது
கற்பூரவள்ளி பூ பயன்கள் ?
நன்றி.