• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • June 19, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

June 13, 2021 By Navinkumar V Leave a Comment


0 Shares
Share
Tweet
Share
+1

மரத்தின் பெயர் : அகத்திமரம்

தாவரவியல் பெயர்: செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா

ஆங்கில பெயர் : Vegetable Hummingbird, Hummingbird tree

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரங்கள்

வாழிடம்: வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

வளரியல்பு : இலையுதிர் மரமாகும்.

பொதுப்பண்புகள் :

அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப்படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது.

அகத்தி மரம் குறுகிய காலம் மட்டுமே வாழக்கூடிய வேகமாக வளரக்கூடிய மரமாகும்.

நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும்.

மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.

இலைகள் 15 – 30 செ.மீ. நீளம் உடையது.

ஒரு இலையில் 40 – 80 சிறு இணுக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 – 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்துவார்கள்.

இலைகள் இளமையில் அடர் பச்சை நிறமுடையது, முதிர்ந்தபின் மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.

இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும்.

விதை 8 மி.மீ. நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா.

பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மரப்பண்பு:

இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

இம்மரம் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

சாதகமான சூழல் நிலைமைகள்:

மழை

அதிகம் (1500mm விட அதிகமாக),நடுத்தரம் (700 – 1500 மிமீ இடையே)

வெப்பநிலை

40 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

மண்

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH

6.5 – 7.5

உயரம்

800 மீ வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு

சமவெளிப்பகுதி,கடற்கரை சமவெளிப்பகுதி

மரம் வளர்ப்பு வழிமுறைகள்

இயற்கை மறு உருவாக்கம்

சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்

நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

விதை சேகரிப்பு

பழுத்த நெற்றானது ஏப்ரல் – மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.

நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.

ஒரு கிலோ விதையில் 15000 – 16000 விதைகளிருக்கும்.

விதைகள் ஒரு வருடம் வரை முளைப்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

விதை முளைப்புத்திறன் 80 ; 90 சதிவிகிதமாகும்.

விதை சிகிச்சை

தேவையில்லை.

நாற்றங்கால் தொழில்நுட்பம்

பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைக்கப்பட வேண்டும்.

பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.

3 – 5 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.

விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைக்கப்பட வேண்டும்.

பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.

3 – 5 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.

விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம்

நேரடி விதைப்பு:

1.8 மீ இடைவெளியில் 30 செ.மீ ஆழத்தில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.

பருவ மழை சமயத்தில் 1.8 x 1.8 x 1.8 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.

பருவ மழை சமயத்தில் 1.2 x 1.2 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

குழிகள் மழை பொழிவுக்கு முன்னதாக எடுக்க்ப்பட வேண்டும்.

பராமரிப்பு/நோய்

களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் அவசியமாகும்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 4 ; 9 கிலோ கீரை மகசூலாக கிடைக்கும். * இடத்திற்கேற்ப மகசூல் மாறுபடுகிறது

பரிந்துரைக்கப்பட்ட அறுவடை

விதைக்கப்பட்டதிலிருந்து 8 மாதங்களில் முதல் அறுவடை செய்யப்படுகிறது. அதன் பின் 60 ; 80 நாட்களுக்கு ஒரு முறை இதன் இலைகள் கீரைக்காக அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர்

வெண்ணிலா, மிளகு போன்றவை வளர ஊடு பயிராகவும் பயன்படுகிறது.

வெற்றிலை மற்றும் தீவனப் பயிர்களை ஊடு பயிரிடலாம்.

சந்தை விவரங்கள்

ஒரு டன் மரம் 2300 ; 2600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. * சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

பயன்கள் :

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

அகத்தி பட்டையிலிருந்து உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. அகத்தி கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும். அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

பிற பயன்கள்

மரப்பட்டை கசிவு விதையில் இருந்து கோந்து போன்றவை பெறப்படுகிறது. கம் ஆராபிக்கிற்கு மாற்றாக இந்த பசை பயன்படுகிறது.

மரப்பட்டையிலிருந்து டானின் பெறப்படுகிறது.

வெண்மை நிற மரக்கட்டை இலேசாகவும், மென்மையாகவும் உள்ளது. மரக்கட்டையின் அடர்த்தி வயது அதிகரிக்கும போது அதிகரிக்கும்.

இக்கட்டை வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

நோய் தடுக்கும் முறைகள் :

இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

Filed Under: கீரைகள், மரங்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog