- சிறுகீரை இந்தியாவில் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.
- இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும்.
- சுமார் இருபது செ.மீ உயரம் வரை செங்குத்தாக வளரக்கூடியது.
- நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.
சிறுகீரை எப்படி பயிரிடுவது…?
- சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும். இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
- நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.
- ஒரு எக்டருக்கு சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
- தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
- கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுது தான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
- விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். வாய்க்கால் பாசனமாக இருந்தால் கவனமாக நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். நிழல் பகுதியாக இருக்க கூடாது. அதிக வெளிச்சம் தேவைப்படும்.
- ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.
- கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
- 25 நாட்களில் கீரை தயாராகிவிடும். 40 அல்லது 50 நாட்களில் இக்கீரையை செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறுகீரை பயன்கள்:
- இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
- சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
- குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
- சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரவல்லது.
Mohammad says
Sir I want a sirikira molecules
ந.திருமுருகன் says
ஐயா உங்களுடைய தகவலுக்கு நன்றி ஐயா எங்கள் வயலில் சிறுகீரை பயிரிட்டுள்ளேன் அதில் வேரழுகள் தண்டு அழுகல் வருகிறது அதை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி அந்த வயலில் நன்றாக மக்கிய எரு மற்றும் வேப்பம் புண்ணாக்கு இட்டுள்ளேன்
Navinkumar V says
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam