பலாமரத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப நாடுகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம், மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழமாகும்.
பலா மரமானது இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் வளர்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை, கொல்லிமலை பகுதிகளில் விளைகிறது.
பயிரிடுவது எப்படி:
- ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.
- வண்டல் செம்மண்ணில் பலா சிறப்பாக விளையும் . ஆனால் நிலம் அழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
- நிலத்தை நன்றாக உழுது பின்பு 1 மிட்டர் அகலம், 1 மிட்டர் அழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வெரு குழிகளிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75% தொழுஉரம் , 15% மண்புழு, 5% செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றறைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணிர் ஊற்றி ஆற விடவேண்டும்.
- விதை முலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.
- ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணிர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் கொடுத்தால் போதுமானது. மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை.
- மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ , தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும். வருட வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் 50 கிலோ அளவு தொழு உரமும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 2 கிலோ அளவும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.
- செடிகள் வளரும் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டு கிளைகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.
- ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் நல்ல தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு கூடுதலாக உள்ள பிஞ்சுகளை அகற்றிவிட வேண்டும்.
- விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காப்புக்கு வரும். ஆனால் ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்க தொடங்கும். காயில் உள்ள முள்ளை வெட்டி பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த காய் அறுவடைக்கு தயாரான காய், பால் போன்ற திரவம் வந்தால் அந்த காயை பறிக்க கூடாது. காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம்.
- ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பலன்களை பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை பயிரிடலாம்.
பயன்கள் :
- பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.
- பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக உண்ணலாம்.
- கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.
- பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
- பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
- பலாப்பிஞ்சினை சமைத்து உண்டால் பித்தமும், நீர் வேட்கையும் நீங்கும்.
- பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி, அதனை தேனில் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.
- பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
பசுபதி says
இப்படி போட்டால் எப்படி. என்ன பருவத்தில் எந்த மாதிரி
நோய் வரும். அதை சரிசெய்வது எப்படி. பிஞ்சுக்கு நோய் வந்தால் என்ன செய்வது. பிஞ்சு உதிராமல் இருக்க என்ன செய்வது. மரத்துக்கு நோய் வந்தால் என்ன பண்ணனும். இதுதான் முக்கியம்
Navinkumar V says
சந்தேகங்களை புகைப்படத்துடன் எங்கள் குழுவில் பதிவிடுங்கள். உதவுகிறோம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Hariharachakkaravarthi Venugopal says
அண்ணா எங்கள் வீடில் 10(வயது)வருடங்களாக பலா மரம் உள்ளது. ஆனால் இன்னும் கைப்பூ வரவில்லை. எப்போதாவது ஒரு பூ பூக்கிறது ஆனால் அதுவும் கருகி விடுகிறது. அதை எப்படி பராமரிக்க வேண்டும். அதற்கு என்ன உரம் வைக்க வேண்டும் . நீர் அதிகம் பாய்ச்ச வேண்டுமா ?
Navinkumar V says
கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை. கீழுள்ள லின்கில் பஞ்சகவ்யா மற்றும் அமிர்த கரைசல் பற்றி சொல்லி உள்ளேன். அதனை தயார்செய்து ஊற்றுங்கள். பூக்கள் நன்றாக பிடிக்கும்
https://agriculturetrip.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Anbu says
மரகுச்சி நட்டால் வளருமா….?
வெங்கடேசன் says
வளர்ந்துவரும் பலா செடிகளில் இலைகள் அதிகம் பழுத்து உதிர்கிறது. என்ன செய்ய வேண்டும்? மேலும் அதிக பக்க கிளைகள் உள்ளன. அவற்றை அகற்றலாமா?