• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • August 9, 2022

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
பலாப்பழம்

பலாப்பழம் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்:

October 23, 2017 By Navinkumar V 7 Comments


197 Shares
Share197
Tweet
Share
+1

பலாமரத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப நாடுகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம், மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழமாகும்.

பலா மரமானது இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் வளர்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை, கொல்லிமலை பகுதிகளில் விளைகிறது.

பயிரிடுவது எப்படி:
  • ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.
  • வண்டல் செம்மண்ணில் பலா சிறப்பாக விளையும் . ஆனால் நிலம் அழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
  • நிலத்தை நன்றாக உழுது பின்பு 1 மிட்டர் அகலம், 1 மிட்டர் அழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வெரு குழிகளிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75% தொழுஉரம் , 15% மண்புழு, 5% செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றறைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணிர் ஊற்றி ஆற விடவேண்டும்.
  • விதை முலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.
  • ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணிர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் கொடுத்தால் போதுமானது. மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை.
  • மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ , தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும். வருட வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் 50 கிலோ அளவு தொழு உரமும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 2 கிலோ அளவும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.
  • செடிகள் வளரும் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டு கிளைகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.
  • ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் நல்ல தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு கூடுதலாக உள்ள பிஞ்சுகளை அகற்றிவிட வேண்டும்.
  • விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காப்புக்கு வரும். ஆனால் ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்க தொடங்கும். காயில் உள்ள முள்ளை வெட்டி பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த காய் அறுவடைக்கு தயாரான காய், பால் போன்ற திரவம் வந்தால் அந்த காயை பறிக்க கூடாது. காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம்.
  • ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பலன்களை பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை பயிரிடலாம்.
பயன்கள் :
  • பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.
  • பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக உண்ணலாம்.
  • கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.
  • பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
  • பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
  • பலாப்பிஞ்சினை சமைத்து உண்டால் பித்தமும், நீர் வேட்கையும் நீங்கும்.
  • பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி, அதனை தேனில் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.
  • பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: பழங்கள் Tagged With: பலாப்பழம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. பசுபதி says

    March 5, 2019 at 3:20 pm

    இப்படி போட்டால் எப்படி. என்ன பருவத்தில் எந்த மாதிரி
    நோய் வரும். அதை சரிசெய்வது எப்படி. பிஞ்சுக்கு நோய் வந்தால் என்ன செய்வது. பிஞ்சு உதிராமல் இருக்க என்ன செய்வது. மரத்துக்கு நோய் வந்தால் என்ன பண்ணனும். இதுதான் முக்கியம்

    Reply
    • Navinkumar V says

      March 28, 2019 at 12:12 pm

      சந்தேகங்களை புகைப்படத்துடன் எங்கள் குழுவில் பதிவிடுங்கள். உதவுகிறோம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  2. Hariharachakkaravarthi Venugopal says

    March 18, 2019 at 5:57 am

    அண்ணா எங்கள் வீடில் 10(வயது)வருடங்களாக பலா மரம் உள்ளது. ஆனால் இன்னும் கைப்பூ வரவில்லை. எப்போதாவது ஒரு பூ பூக்கிறது ஆனால் அதுவும் கருகி விடுகிறது. அதை எப்படி பராமரிக்க வேண்டும். அதற்கு என்ன உரம் வைக்க வேண்டும் . நீர் அதிகம் பாய்ச்ச வேண்டுமா ?

    Reply
    • Navinkumar V says

      March 28, 2019 at 12:08 pm

      கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை. கீழுள்ள லின்கில் பஞ்சகவ்யா மற்றும் அமிர்த கரைசல் பற்றி சொல்லி உள்ளேன். அதனை தயார்செய்து ஊற்றுங்கள். பூக்கள் நன்றாக பிடிக்கும்

      https://agriculturetrip.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

      Reply
  3. Anbu says

    June 7, 2021 at 9:24 am

    மரகுச்சி நட்டால் வளருமா….?

    Reply
  4. வெங்கடேசன் says

    January 22, 2022 at 8:34 am

    வளர்ந்துவரும் பலா செடிகளில் இலைகள் அதிகம் பழுத்து உதிர்கிறது. என்ன செய்ய வேண்டும்? மேலும் அதிக பக்க கிளைகள் உள்ளன. அவற்றை அகற்றலாமா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (4)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (7)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (3)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (47)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (7)
  • விவசாய புகைப்படங்கள் (2)

Recent Posts

  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 2)
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 1)
  • புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவரம் இதோ
  • மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ
  • விவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com
Phone: (+91) 80508 15727
Fax: (+91) 99432 12913

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2022 by Agriculture Trip. Developed by Navinblog