தெற்காசிய பகுதிகளில் குறிப்பிட்ட பருவங்களில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் ஆகும். இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. அவரைக்காயில் ஏராளமான வகைகள் உள்ளன. வீட்டின் மேற்கூரையில் இன்றளவும் கிராமங்களில் வளர்க்கப்படுகிறது.
பயிரிடும் முறை:
- சித்திரை, ஆடி,ஆவணி,தை,மாசி மாதங்கள் அவரைக்காய் சாகுபடிக்கு சிறந்த பருவங்கள் ஆகும். இக்காலங்களில் பயிர்செய்யும் பொழுது நல்ல மகசூலை பெறலாம்.
- செம்மண் நிலங்கள் அவரைக்காய் விளைச்சலுக்கு சிறந்த மண்வகை ஆகும்.
- மண் நன்றாக பொடியாகும் அளவிற்கு நிலத்தை உழவு செய்ய வேண்டும். ஏராளமான அவரைவகைகள் உள்ளன. நாம் இங்கே குட்டை மற்றும் பந்தல் அவரை சாகுபடி முறையை பார்க்கலாம்.
- பயிர் செய்யும் நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
- குட்டை அவரை 3 அடி உயரமும் நன்கு படரவும் செய்யும், எனவே குட்டை அவரை பயிரிடும்பொழுது பாத்திகளில் 2 அடி இடைவெளிகளில் 3 செ.மீ ஆழத்திற்கு இரண்டு இரண்டு விதைகளாக நட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- பந்தல் அவரைக்கு 1 அடி இடைவெளியில் விதைகளை நட வேண்டும்.
- விதைகளை நட்ட பின்பு நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முன்பும், காய் அறுவடைக்கு அடுத்த நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு ஊட்டமாக வளரும், பூக்களும் நன்கு வளர்ந்து அடர்த்தியான விளைச்சலை தரும்.
- மாதத்திற்கு ஒருமுறை வேர்களுக்கு தொழுவுரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- அடிக்கடி களைகளை நீக்கி களையில்லாமல் வைத்திருப்பது அதிக மகசூலும் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.
- பந்தல் முறை சாகுபடிக்கு பந்தல் அமைத்து கொடிகளை அதன்மேல் பரவவிட வேண்டும். இயற்கை பூச்சி கொல்லிகளை இயற்கை உரத்தையும் பயன்படுத்தி நல்ல முறையில் பராமரித்தாலே நல்ல மகசூல் கிடைக்கும்.
- நன்கு அறுவடைக்கு திரண்ட காய்களை வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். காய்கள் முற்றுவதற்கு முன்பே அறுவடை செய்வது நல்லது.
அவரைக்காயின் பயன்கள்:
- அவரை பிஞ்சை வாரம் இருமுறை சேமித்து உண்பதினால் உடல் ஆரோக்கியம் பெறும், பித்தம் குறையும்.
- அவரை பிஞ்சில் துவர்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- ரத்த நாளங்களில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உடையதால் இதனை ரத்த அழுத்தம், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் அவரைக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவரைக்காய் உண்பதினால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம்,தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Leave a Reply