• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
ஆமணக்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

ஆமணக்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 25, 2018 By Navinkumar V 2 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

ஆமணக்கு செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.

பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.

இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து காணப்படும்.

ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.

இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஆமணக்கு மானாவாரியாக பயிரிட ஜூன் – ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவைப்பயிராக பயிரிட செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும்.

மண்

வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தை 2-3 முறை கட்டிகள் இல்லாமல் நன்கு புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். இறவை பயிராக இருந்தால் நீர் பாய்ச்ச ஏதுவாக பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம் கலந்து 4 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில், விதைப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் 1% பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.

விதைத்தல்

மானாவாரிப் பயிராக இருந்தால் 90 செ.மீ x 60 செ.மீ இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 90 செ.மீ x 90 செ.மீ இடைவெளியிலும் விதைக்க வேண்டும். டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

மானாவாரி பயிராக இருந்தால் விதை விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

ஆமணக்கு

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு மானாவாரி பயிராக இருந்தால் 45 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். இறவை பயிருக்கு 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.

மானாவாரி பகுதிகளில் 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை ஈரப்பதத்திற்கு ஏற்ப மேலுரமாக இடவேண்டும்.

இறவை பகுதிகளில், 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் மேலுரமாக இட வேண்டும்.

கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

விதைத்த 3 நாட்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காத போது விதைத்த 20 மற்றும் 40வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
சுருள் பூச்சிகள்

சுருள் பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கம்பளி ரோமப்புழு

கம்பளி ரோமப் புழுவை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் முட்புழுவையும் கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன்

இலைப்பேனை கட்டுப்படுத்த டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

செதில்பூச்சி

மோனோகுரோட்டபாஸ் 320 மிலி, வேப்பம் எண்ணெய் 1 லி, காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்று கருகல்

நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது மெட்டலக்சில் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.

முற்றிய விதைக்கொத்தை இதர கொத்துக்களை பாதிக்காதவாறு அறுவடை செய்ய வேண்டும். விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். காய்ந்த கொத்தை குச்சி கொண்டு அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கலாம் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.

மகசூல்

மானாவாரியில் எக்டருக்கு 1800 கிலோவும், இறவையில் 3500 கிலோவும் மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.
  • ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.
  • ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
  • பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.
  • ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
  • சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

Filed Under: எண்ணெய் வித்துக்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Velusamy. S says

    December 6, 2018 at 5:54 am

    Welcome to. Castor oil Cultivation in Tamilnadu Formar Impiliments economy

    Reply

Leave a Reply to Velusamy. S Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog