மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தை வகிக்கிறது.
உளுந்து வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம் ஆகும்.
உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது.
தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
உளுந்து எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1, ஏடிடீ 5, ஆடுதுறை 5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்யலாம்.
மாவட்டம் / பருவம் | இரகங்கள் |
ஆடிப்பட்டம் (ஜீன் – ஆகஸ்ட்) | |
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் | டி 9, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், சேலம் மற்றும் நாமக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை | டி 9, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி | கோ 5, டி 9, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி | கோ 5, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
ஈரோடு, கோயமுத்தூர் | கோ 5, வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் – நவம்பர்) | |
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி | வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, கே 1* |
ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, பெரம்பலூர், மற்றும் கரூர் | வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4 |
நெல் தரிசில் (ஜனவரி) | |
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், மற்றும் கரூர் | ஏடீடி 3 |
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி | ஏடீடி 3 |
மண்
தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் ஏற்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழவு செய்து சமன்படுத்த வேண்டும். நில மேம்பாட்டுக்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 20 கிலோ விதை போதுமானது.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் கார்பன்டாசிம் (அ) திராம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைகளை 30×10 செ.மீ இடைவெளியில் மானாவாரியாக விதைக்க வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப பார்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும்.
மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
பயிர் | ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) | ||||
தழை | மணி | சாம்பல் | கந்தகம் | ||
உளுந்து | மானாவாரி | 12.5 | 25 | 12.5 | 10 |
இறவை | 50 | 50 | 25 | 20 |
களை நிர்வாகம்
களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாள் ஒரு எக்டருக்கு 500 லி என்ற அளவில் தெளிக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் மருந்தை ஒரு எக்டருக்கு 50 கிராம் வீதம் விதைத்த 15 அல்லது 20ம் நாளில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும். பாசன உளுந்துக்கு களை முளைக்கும் முன் ஐசோப்ரோட்ரான் எக்டருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
நெல் தரிசு பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகள்
அசுவினி
- இவை செடிகளின் இலையிலிருக்கும் சாற்றை உறிஞ்சி பயிரை சேதப்படுத்தும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் தென்படும்.
- இந்த பூச்சி தேன் போன்ற திரவத்தை வெளியிடும். இதனால் அதிக எறும்புகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ @ 12 கிராம்/10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
இலைப்பேன்
- அவை மேல் புறத்தில் சாற்றை உறிந்து குடிக்கும்.
- இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர் பழுப்பு நிற திட்டுகள் தோன்றும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு உலர்ந்து போகும்.
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ @ 12 கிராம்/10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
காய் துளைப்பான்
- பாதிக்கப்பட்ட காய்களில் துளைகள் காணப்படும்.
- இவைகள் இள காய்களை உட்கொண்டு வாழும்.
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த எம்மாமெக்ட்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி @ 10 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
உளுந்தை தாக்கும் நோய்கள்
இலைப்புள்ளி நோய்
- இலைகளில் கருப்பு புள்ளிகள் தென்படும்.
- இறுதி கட்டத்தில் செடிகள் வளர்ச்சி குன்றி தென்படும்.
கட்டுப்படுத்தும் முறை
- கலப்பு மருந்து (கார்பென்டேசிம் 12% + மேன்கோசெப் 63% டபிள்யு.பி) @ 40 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
சாம்பல் நோய்
- பாதிக்கப்பட்ட செடியின் இலைகளில் வெள்ளை நிற பூஞ்சை தென்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கலப்பு மருந்து (கார்பென்டேசிம் 12% + மேன்கோசெப் 63% டபிள்யு.பி) @ 40 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
அறுவடை
முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 250 – 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
உளுந்துடன் ஊடுபயிராக தட்டப்பயிர் சாகுபடி செய்யலாம்.
உளுந்து பயன்கள்:-
- கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
- உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
- சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
- நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
- 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
Much appreciated, it really helpful for me to get know about cultivation and seed selection.
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Sir enaku வெள்ளை உளுந்து மொத்த விலைக்கு தேவை .
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
உளுந்து தோல் நீக்கும் இடம் சிவகங்கை மாவட்டத்தில் எந்த ஊரில் உள்ளது
பெப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதங்களில் தவிர எந்த மாதத்தில் விதைக்கலாம்
ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை