• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • September 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
ஊசிமல்லி (முல்லை) பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

ஊசிமல்லி (முல்லை) பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

May 6, 2018 By Navinkumar V 3 Comments


23 Shares
Share23
Tweet
Share
+1

முல்லைப்பூ கொடிவகையை சார்ந்த தாவரமாகும்.

இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், நறுமண பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

தமிழகத்தில் முல்லைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிலும் பந்தலிட்டு வளர்க்கின்றனர்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

முல்லையில் ஆம்பூர் முல்லை, ஆற்காடு முல்லை, பச்சை முல்லை, குட்டை கூர்முனை, குட்டை வட்டமுனை, நடுத்தர கூர்முனை, நீண்ட கூர்முனை, நீண்ட வட்ட முனை என உள்ளூர் வகைகள் பல உள்ளன. அதைதவிர பாரிமுனை, கோ 1, கோ 2 இரகங்களும் உள்ளன.

பருவம்

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.

மண்

செம்மண், களிமண், கரிசல்மண் ஆகியவை ஊசிமல்லி சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை தயார் செய்ய வேண்டும். பின்பு குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து ஆற விடவேண்டும்.

விதையளவு

ஓரு எக்டரில் பயிரிட 1,000 செடிகளும், அடர் நடவு முறையில் பயிரிடுவதற்கு 4,000 செடிகளும் தேவைப்படும்.

விதைநேர்த்தி

10 லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகாவ்யா கலந்து 8 மாத வயது கொண்ட முல்லைப் பதியன்களை அக்கரைசலில் நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்

வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் குழியின் மையப்பகுதியில் விதைநேர்த்தி செய்த பதியன்களை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் நாளில் புதுத்துளிர் வளர ஆரம்பிக்கும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

இயற்கை உரமிடல் முறையில் 60-ம் நாளில் ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ கோழி எரு வைத்து, கிளறிவிட வேண்டும். 20-ம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யா, தலா 10 மில்லி வீதம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும்.

செயற்கை உரமிடல் முறையில் செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

20 நாட்களுக்குப் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை களைகளை அகற்ற வேண்டும். செடிகள் வளர்ந்து நிழல் கட்டிக்கொண்டால் களை தோன்றாது. ஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் வெட்டிவிட்டு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்ககிளைகள் அதிகமாக தோன்றும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.

சிவப்பு சிலந்திப்பூச்சி

சிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

பூ மொட்டு புழு

பூ மொட்டு புழுவை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

மே – நவம்பர் மாதங்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த மொக்குகளை காலை வேளையில் பறிக்கவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • முல்லைப்பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தீராத தலைவலிகள் தீரும்.
  • முல்லைப்பூவின் சாறு 2 அல்லது 3 துளிகள் கண்ணில் விட்டு வர கண்பார்வை குணமாகும்.
  • ஒரு கை‌ப்‌பிடி அளவு மு‌ல்லை‌ப் பூவை ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியாக ‌வ‌ற்‌றியது‌ம் 15 ‌மி‌ல்‌லி அளவு குடி‌‌த்து வர மாத‌விடா‌ய் கோளாறுக‌ள் குணமாகு‌ம்.
  • மு‌ல்லை மலரை தலை‌யி‌ல் சூடி‌க் கொ‌ண்டு, அத‌ன் மண‌த்தை முக‌ர்‌ந்தால் மனவியா‌திக‌ள் ‌நீ‌ங்‌கி மன‌த்தெ‌ளிவு உ‌ண்டாகு‌ம் எ‌ன்றும் கூற‌ப்படு‌கிறது.

Filed Under: பூக்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. மணிகண்டன் says

    June 19, 2020 at 3:23 am

    நான் முல்லைப்பூ 500 செடிகள் வளர்த்து வருகிறேன் இரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் செடிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது பாதிக்கு பாதி மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது பூக்களும் அதிகமாக வரவில்லை இதற்கு என்ன தீர்வு மண் பிரச்சனையா இல்லை செடிகள் பிரச்சனையா இதுக்கு எனக்கு ஒரு தீர்வு வேண்டும்…

    Reply
    • Venkatesan says

      November 6, 2022 at 2:36 pm

      முல்லை செடி மற்றும் காகட்டான் செடி வேண்டும் எங்கு கிடைக்கும்.. நல்ல ரகம் தெரிந்தால் சொல்லுங்க

      Reply

Leave a Reply to மணிகண்டன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog