• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
எள் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

எள் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 25, 2018 By Navinkumar V 6 Comments


3 Shares
Share3
Tweet
Share
+1

இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவாகும். எள்ளில், கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன.

எள்ளானது 5000 ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்கப்பட்ட செடியாகும்.

பின்னர் சீனா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)1, டி.எம்.வி 7 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதங்கள் சிறந்தவை. இறவைப் பயிராக பயிரிட மாசி மாதங்கள் ஏற்றவை.

மண்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் சராசரி கார அமிலத்தன்மை 6 – 8.0க்குள் இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.

விதையளவு

மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும். இறவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும்.

விதைநேர்த்தி

அசோஸ்பைரில்லம் 100 கிராம், சூடோமோனஸ் 100 கிராம் ஆகியவற்றுடன் விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து, அதில் விதைக்கலவையைச் சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து விதைத்தால் வேரழுகல் மாதிரியான நோய்கள் தாக்காது. நன்றாக முளைக்கவும் செய்யும்.

விதைத்தல்

20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது நல்லது. அப்போதுதான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

எள்ளைப் பொறுத்தவரை தண்ணீர் அதிகமாகத் தேவைப்படாது. செடியை வாடவிட்டு தண்ணீர் கட்டினால், இலை குறைந்து காய் அதிகமாகக் காய்க்கும். ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை தண்ணீரில் கலந்து விடவேண்டும். எள்ளை விதைநேர்த்தி செய்து, ஜீவாமிர்தக் கரைசலையும் கொடுப்பதால், எள்ளில் அதிகமாக தாக்குதல் நடத்தும் மாவுப் பூச்சிகளின் தாக்குதல் குறைந்துவிடும். 45 முதல் 55 நாட்களில் பூ எடுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் டேங்குக்கு (13 லிட்டர்) 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளித்தால், பூ உதிர்வது குறையும்.

உரங்கள்

இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து ( பொட்டாசியம் 8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். இவ்வாறு இடும்போது தழைச்சத்து கால்பங்கினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். கூடவே, அதிகப்படியாக உள்ள செடிகளை அகற்றவேண்டும். முதல் களை எடுத்ததிலிருந்து 15 நாட்கள் விட்டு அடுத்த களை எடுக்கவேண்டும். 40 நாட்களானதும் செடி வளர்ந்து நிழல் அடைத்துக் கொள்ளும். எனவே, மேற்கொண்டு களைகள் அவ்வளவாக வளராது.

பயிர் பாதுகாப்பு
புழுக்கள் மற்றும் ஈக்கள்

தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் ஈயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மி.லி குயினால்பாஸ் 25 இ.சி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 0.03 சதம் வேம்பு சார்ந்த மருந்துகளை இருமுறை பூக்கும் தருணத்திற்கு முன்பு தெளிக்க வேண்டும்.

காய் துளைப்பான்

காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த பாசலோன் 4 சதம் (அ) குயினால்பாஸ் 1 சதம் (அ) மாலத்தியான் 5 சதம் தூள்களை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் விதைத்த 25, 35 மற்றும் 60 நாட்களில் தூவ வேண்டும்.

வேரழுகல் நோய்

வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 30ம் நாள் மண்ணில் இடலாம் அல்லது கார்பன்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கரைத்து செடிக்கு அருகில் ஊற்ற வேண்டும்.

இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி

இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை, ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் மேங்கோசெப் மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இயற்கை முறை கட்டுப்பாடு

70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.

அறுவடை

85 நாட்களுக்கு மேல் செடியில் இலைகள் உதிர்ந்துடும். இந்த நிலையில், செடியின் நுனிப்பகுதியில் இருக்கும் காய்களை உடைத்துப் பார்க்கவேண்டும். விதை பழுப்பு நிறத்தில் இருந்தால், செடியை அறுவடை செய்யலாம். ஐஸ் கோன் போல அறுவடை செய்த செடிகளை அடுக்கி வைக்கவேண்டும். காய்ப் பகுதி மேல்புறமும், அடிப்பகுதி தரையிலும் இருப்பது போல் ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும். இந்த சமயத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் இருக்க, காய்களுக்கு மத்தியில் வேப்பிலையை வைக்க வேண்டும். பிறகு, செடிகளைப் பிரித்து, காய வைத்து, அவற்றை கையில் எடுத்து ஆட்டினாலே காய்கள் கொட்டிவிடும். அவற்றை வெயிலில் காய வைத்தால், காய்கள் வெடித்து, அதிலிருந்து எள் கிடைக்கும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

ஊடுபயிராக துவரை பயிர் செய்யலாம்.

பயன்கள்
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சருமத்தில் சொறி, சிறங்கு உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும்.
  • கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப்படுத்தும்.
  • வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
  • எள்ளின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
  • எள் எண்ணெயை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.

Filed Under: எண்ணெய் வித்துக்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Nilavazhagan E says

    February 22, 2020 at 10:17 am

    sir,somebody says would put the NPK fertilizer because sesame plants wants nitrogen. what i do?

    Reply
  2. Vivasayi says

    April 23, 2020 at 2:48 am

    Whatsapp Group open pannirunga bro

    Reply
  3. Ravi S says

    July 14, 2020 at 4:40 am

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்

    மேலே இதுபோல் நீங்கள் குறிப்பிட்டுள்ளது தவறு.எள் எடையை கூட்டும் என்பதே சரி.

    Reply
  4. ராமசாமி says

    March 16, 2022 at 5:14 am

    எள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
    பழமொழி: எளச்சவுனுக்கு எள்ளு,
    கொழுத்தவுனுக்கு கொள்ளு என்பார்கள்.
    தவறான தகவல்…

    Reply

Leave a Reply to Nilavazhagan E Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog