• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • September 13, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
Egg Plant

கத்தரிக்காய் (Brinjal or Egg plant)

September 17, 2017 By Navinkumar V 4 Comments


15 Shares
Share15
Tweet
Share
+1

கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்விகமாக கொண்டது. கருநீலம், இளம்பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீல் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகை கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என் முற்றாத அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய பயன்படுகின்றன.

பருவம்

மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் சாகுபடிக்கு சிறந்தவை.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய செம்மண், வண்டல் மண் வகைகள் உகந்தது.

விதையளவு

ஒரு எக்டருக்கு 400 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதைநேர்த்திச் செய்ய வேண்டும். மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் விதைநேர்த்தி செய்யலாம். 400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லத்தை சிறிது அரிசிக் கஞ்சியுடன் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால்

நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுக்கு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நடவு வயலை நன்கு உளி கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள நிலத்தில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்றுகளின் வயது 25 முதல் 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். நீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும். மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உரங்கள்

தொழு உரமாக எக்டருக்கு 25 டன் மற்றும் இதனுடன் வேப்பம் பிண்ணாக்கு 200 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல்ச்சத்து 30 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.

நடவிற்குப்பின் மேற்சொன்ன உரங்களில் பாதியளவு உரங்களை மேலுரமாக இட வேண்டும். உரங்களை கத்தரிச் செடியிலிருந்து 10 செ.மீ தள்ளி மண்ணில் இட்டு கலந்து செடிகளுக்கு மண் அணைத்து விடவேண்டும். செடிகளுக்கு உரமிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

செடிகளுக்கு ட்ரைக்கோடானால் 2 பிபிஎம் மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35 மில்லி கிராம் இவற்றை ஒரு லிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

களை நிர்வாகம்

நாற்றுகளை நடுவதற்கு முன் களைக்கொல்லி இடுதல் அவசியம். களைகள் முளைக்கும் முன் அவற்றைக் கட்டுப்படுத்த புளுகுளோரலின் என்னும் களைக் கொல்லியினை 1 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து ஒரே சீராகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு களைக்கொல்லி தெளித்தவுடன் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும். பின்பு மேலுரமிடுவதற்கு முன்பு கொத்துக்களை கொண்டு களைகளை நீக்கவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

காய்த்துளைப்பான்

தண்டு மற்றும் காய்த்துளைப்பானை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்டோசல்ஃபான் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் மூக்கு வண்டு

சாம்பல் மூக்கு வண்டுகளை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.

​​​​​​நூற்புழு

நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போஃபியூரான் இட வேண்டும்.

சிலந்திப்பூச்சி

சிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியை சேர்த்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசண கொல்லியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.

வாடல் நோய்

வாடல் நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மிலி (அ) டைமெத்தோயோட் 2.5 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்களை பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்யவேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன்கள் வரை கிடைக்கும். வீரிய ஒட்டு இரகங்களில் 45-50 டன்கள் வரை கிடைக்கும்.

Brinjal-Egg Plant
Brinjal-Egg Plant cultivation
பயன்கள்:
  • கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
  • வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
  • அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: காய்கறிகள் Tagged With: கத்தரிக்காய்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Muthueswaran j says

    May 9, 2020 at 12:41 am

    Hi sir na kathri nattu irukken kathri sedi arokiyamave ila sedigal paluthu pogindrana selavu tha athigam aguthu

    Reply
  2. anandaraj says

    November 4, 2020 at 12:35 pm

    sir i need some tips for the differentiate organic and inorganic in cost wise

    Reply
  3. Muthukrishnan says

    December 23, 2022 at 12:51 pm

    Super! Very Useful Our Roof Top Garden

    Reply

Leave a Reply to anandaraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog