• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
கறிவேப்பிலை சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்

கறிவேப்பிலை சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்

October 24, 2017 By Navinkumar V 8 Comments


17 Shares
Share17
Tweet
Share
+1

இந்தியாதான் கறிவேப்பிலையின் தாயகம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் முறையா கோயிங்கி ஆகும். கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும்.

பயிரிடும் முறை:
  • ஜூலை – ஆகஸ்ட் மாதம் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
  • கருவேப்பிலை பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மை உடையது. ஆனால் ஊட்டமிக்க செம்மண் வகை நிலங்கள் மிகவும் ஏற்றது. பொதுவாக நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மை உடையது.
  • கருவேப்பிலை பொதுவாக விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே தோல் நீக்கி அல்லது அப்படியே நில மேடை பாத்திகளில் வரிசையாக ஊன்ற வேண்டும், விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும். பின்பு இரண்டு அல்லது மூன்று மாத நாற்றுகளை எடுத்து கலவை மண் நிரப்பிய பொலித்தீன் பைகளில் நட்டு, பாதுகாக்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடைய நாற்றுகளையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
  • நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொது 5 டன் தொழு உரம் இட வேண்டும். பெரிய செடிகளாக வளர்க்க 2 . 5 மீட்டர் இடைவெளி தேவைப்படும்.குத்துக் செடிகளாக வளர்க்க 1 . 2 மீட்டர் இடைவெளி வேண்டும். அதிக மகசூல் பெற 60 செ.மீ இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும்.
  • தயார் செய்துள்ள குழிகளில் ஒன்று முதல் இரண்டு வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் நாற்றுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
  • நாற்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரமிடும் முறை :
  • 1 அடி ஆழத்தில் சதுர குழிதோண்டி நாற்றுகளை சுற்றி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.
  • வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இட வேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட்டு மண் அணைக்க வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்த வேண்டும். 100 ம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
  • பொதுவாக கறிவேப்பிலை தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆகையால் செடியை சுற்றியுள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து வட்டம் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் வளர்ச்சி அதிகரிக்கும். ஒரு செடிக்கு 5 – 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நடவு செய்த 6 – ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பூமியில் இருந்து 10 செ.மீ உயரம் விட்டு அறுக்கடை செய்ய வேண்டும்.
  • ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும். ஐந்து வருடம் கழித்து 3500 – 5000 கிலோ வரை நல்ல மகசூல் கிடைக்கும்.
பயன்கள்:
  • பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது. அதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது. பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்று போகுதல், பசியற்ற நிலை, சளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமல் இருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: கீரைகள் Tagged With: கறிவேப்பிலை

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Saranya says

    October 25, 2017 at 5:01 am

    Very useful information. Do Well

    Reply
    • Navinkumar V says

      October 26, 2017 at 2:56 am

      Thank You Saranya, Keep Watch my blog for more information about Agriculture.

      Reply
  2. Vadivelan says

    October 27, 2017 at 6:36 am

    Useful information

    Reply
    • Navinkumar V says

      October 27, 2017 at 7:13 pm

      Thank You Vadivelan. Thanks for your support.

      Reply
  3. PONNIAH KUNATHASAN says

    December 13, 2017 at 6:21 am

    கருவேப்பிலைத் தண்டை முளைக்க வைக்க வழியுண்டா?

    Reply
    • Navinkumar V says

      December 14, 2017 at 4:12 pm

      கருவேப்பிலை தண்டை நன்கு சத்துக்கள் நிறைந்த மண்ணில் நட்டு வைத்து அதன் மேற்புறம் காயாமல் இருக்க ஈரமான சாணத்தை வைக்கவும்.

      Reply
  4. Rajesh says

    January 27, 2021 at 7:57 am

    Helo sir, I need karuvapillai nathu for 2 acre

    Please advise wher is Avila ke

    My location Sathyamangalam

    Thanks
    Rajesh

    Reply

Leave a Reply to Rajesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog