• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 19, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
காலிஃபிளவர் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

காலிஃபிளவர் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 24, 2018 By Navinkumar V 2 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

காலிஃபிளவர் குருசிஃபேரஸ் என்ற காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது.

காலிஃபிளவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் காலிஃபிளவர் ஒரு விவசாய பயிராக பரவியது.

அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி.

தமிழ்நாட்டில் சமவெளியில், குளிர் காலங்களில் பயிர் செய்யலாம்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

மலைப்பகுதிகளில் கீபாஜெயண்ட், பனிப்பந்து, செகண்ட் எரிலி, எர்லிகுன்வார்ஈ, செகண்ட் கரிலிகுன்வார், பூசாதபோலி ஆகிய இரகங்கள் ஏற்றவை. சமவெளிப்பகுதிகளுக்கு மார்வல், பாட்னா மீட்சீசன், எரிலிந்தெடிக், செகண்ட் எர்லி, அர்கா கந்தி ஆகியவை ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஆகஸ்ட் – செப்டம்பர், டிசம்பர் – ஜனவரி வரையுள்ள காலம் பயிர் செய்ய ஏற்றது.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் பயிரிட ஏற்றது. பயிரிட குளிர்ச்சியான பனி மூட்டம் தேவை. பொதுவாக இம்மாதிரி பனி மூட்டம் எல்லா மலைப்பகுதியிலும் கிடைக்கும். தமிழ்நாட்டில் சமவெளியில் இப்பயிர்களைக் குளிர் காலத்தில் பயிர் செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரையுள்ள நிலங்கள் ஏற்றவை.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு எக்டர் பயிரிட 100 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படும். தொழு உரம், கலப்பு உரம் 10 கிலோ (9:9:9 முறையே தழை:மணி:சாம்பல்) மற்றும் 50 கிராம் சோடியம் மாலிப்டேட், 100 கிராம் போரக்ஸ் இட்டு மண்ணை நன்கு கிளறிவிட்டு, ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகள் அமைக்கவேண்டும். பாத்தியைச் சுற்றி 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 375 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள பாத்திகளில் 10 செ.மீ நேர் கோட்டில் விதைகளை விதைத்து, மண்ணால் மூடி காய்ந்த புல்லைக்கொண்டு மெல்லிய போர்வை அமைக்க வேண்டும். பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் விதைத்த 15ம் நாள் மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1½ மில்லி என்ற அளவில் கலந்து நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நடவு நிலத்தை 3-4 முறை நன்றாக ஆழமாக உழுது வசதியான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். அவற்றினுள் ஆழமான வாய்க்கால்களுடன் பார்கள் அமைக்கவேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான 30-40 நாட்கள் ஆன நாற்றுக்களை நாற்றங்காலில் இருந்து வேர்கள் சேதமடையாமல் மிக்க கவனத்துடன் பறித்து நடவு வயலில் நீர் பாய்ச்சி 60 x 30 செ.மீ அல்லது 60 x 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்

மலைப்பகுதிகளுக்கு நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 30 டன் தொழு உரம் இட்டு நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து அளிக்கவேண்டும். பிறகு நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக 45:45:45 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.சமவெளிப்பகுதிகளுக்கு நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்ட மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல்சத்து இடவேண்டும். பிறகு நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக 50 கிலோ தழைச்சத்துடன் 2 கிலோ இரசாயன உரம் கலக்காத நுண்ணூட்டக் கலவையை இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

நட்ட 20வது நாள், பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவும், பயிர்கள் சீராக வளரவும் பயிர் களைதல் வேண்டும். பிறகு 30 மற்றும் 45வது நாளில் பயிருக்கும் மண்ணுக்கும் அதிக சேதம் ஏற்படாமல் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்யவேண்டும். நல்ல தரமான காலிஃபிளவர் பெற நன்கு வளர்ந்த பெரிய இலைகளை மடக்கிவிட்டு காலிஃபிளவரை 5-8 நாட்கள் வரை மூடி கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் பூ நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும்.

அசுவினிப் பூச்சிகள்

அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது ஒரு லிட்டர் நீரில் டை மெத்தோயேட் 2 மில்லி மற்றும் 0.5 மில்லி டீப்பாலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மேன்கோசெப் 3 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவேண்டும்.

வேர்முடிச்சு நோய்

வேர்முடிச்சு நோயைத் தடுக்க நாற்றுக்களை நடும்முன் நடவு வயலில் ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஊற்றவேண்டும். அல்லது நாற்றுக்களை நடுமுன் மேற்கண்ட கரைசலில் இரண்டு நிமிடம் வைத்திருந்து நடவேண்டும்.

கூட்டுப்புழு

கூட்டுப்புழுவை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைக்குளோராவாஸ் 2 மில்லி, குளோரிபைரிபாஸ் 4 மில்லி இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும்.

நூற்புழு

நூற்புழுவை கட்டுப்படுத்த செடி நட்ட 15ம் நாள் பியூரடான் குருணை மருந்தை ஒரு ஏக்கருக்கு 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து காட்டில் தூவி விட வேண்டும்.

அறுவடை

சரியான அளவில் காலிஃபிளவர் பூக்களை அறுவடை செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் காலிஃபிளவர் விரிந்து, கிளைகள் உருவாகி, முற்றிய பூக்களாகி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்காது.

மகசூல்

ஒரு எக்டருக்கு 20-30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • காலிஃபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. அதேபோல் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
  • மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது.
  • புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.
  • செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.
  • காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை தயாரிக்கலாம்.

Filed Under: காய்கறிகள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. வெங்கடேசன் says

    August 23, 2022 at 12:43 am

    காலிப்ளவர் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.நான் வீட்டு தோட்டத்தில் சிறிய அளவில் வீட்டு உபயோகத்திற்கு காய்கறிகள் பயிரிட்டு வளர்த்து வருகிறேன். உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக இருந்தது.தஞ்சை மண் காலிப்ளவர் பயிரட ஏற்றதா?
    செம்மண் பகுதி. மண் பரிசோதனை செய்வது எங்கே எப்படி?அதனை கொண்டு இந்த மண்ணில் இந்த வகைகள் மட்டுமே பயிரிட முடியும் என அறியலாமா?தெரிவிக்க வேண்டுகிறேன்.

    Reply

Leave a Reply to வெங்கடேசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog