மாங்கனி யின் பிறப்பிடம் இந்தியா. இப்பழம் ருசிமிக்கது. இதை மிகுதியாக உண்டால் பசிமந்தம், நெஞ்செரிவு, நமைச்சல, வயிற்றுவலி, பேதி, வாந்தி உண்டாகும். மாம்பழம் வைட்டமின் சி செறிவுள்ளது. மாங்காய் ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் புளிப்பான அதிகளவு காரம், எண்ணெய் சேர்ந்த ஊறுகாய் ஆரோக்கியத்தை பாதிக்கும். மூட்டுவாதம், வாயு, தொண்டைப்புண் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்க்கலாம். மாம்பழம் பசியை தூண்டும். நிறத்தை மேம்படுத்தும், இருதய தசைகளை வலுப்படுத்தும். ஈரல் கோளாறு, எடை இழப்பு மற்றும் சரீரஉபாதைகளில் மாங்கனி நல்ல பலனைத் தரும்.
மாங்காயுடன் உப்பு சேர்த்து உண்ண தாகம் தணியும். மங்கிய வெளிச்சத்தில் பொருட்களை பார்க்க முடியாதவர்கள், இரவு பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் மாம்பழம் உண்டு வந்தால் பார்வைத்திறன் சற்று மேம்படும்.
மாங்காயை அதிகளவு உண்ணக்கூடாது. மாங்காய் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. மாம்பழத்தை அளவோடு உண்பவரின் குரல் இனிமையாகும். மாம்பழம் உண்டால் உறக்கப்பிரச்னை இருக்காது. நரம்புகள் வலுப்பெறும். நீடித்த ஆயுள் கிடைக்கும். மாம்பழத்தை தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த மூலம் குணமாகும்.
- மாம்பலத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
- தோல் பளபளக்க மாம்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.
- தோல்வறட்சியை தடுக்கவும் தோல் பளபளக்கவும் மாம்பழ துண்டுகளை கொண்டு அந்த இடத்தில தேய்க்கவும்.
Leave a Reply