• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
கோதுமை (Wheat)

கோதுமை (Wheat)

September 21, 2017 By Navinkumar V 5 Comments


5 Shares
Share5
Tweet
Share
+1

உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த பயிர் கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் முதன்முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போது கோதுமை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

உலக அளவில் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு விளைவிக்கப்படும் தானியம் கோதுமை ஆகும். கோதுமைக்கு மிதமான பருவநிலை ஏற்றது, எனவே தமிழ்நாட்டில் குளிர்ந்த காலநிலை மலை பிரதேசமான நீலகிரி, கொடைக்கானல்,சேர்வராயன் மலை , ஏற்காடு, ஜவ்வாது மலை அடிவாரங்களில் இன்றளவும் கோதுமை பயிரிடப்படுகிறது. இந்திய அளவில் பஞ்சாப் மாநிலம் கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

பயிரிடும் முறை:
  • நவம்பர் – டிசம்பர் மாதங்கள் கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பருவங்கள், இந்த காலநிலைகளில் பயிரிடும்பொழுது நல்ல மகசூலை பெறலாம்.
  • வண்டல் மற்றும் கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற மண் வகைகள் ஆகும்.
  • பயிரிடப்படும் நிலத்தை நன்கு உழுது மண் கட்டிகள் இல்லாதவாறு செய்யவேண்டும். பின்பு பாதிகளாக பிரித்து கொண்டு அந்த பாத்திகளுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும்.
  • ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40 – 45 கிலோ அளவுள்ள விதைகளை பயன்படுத்த வேண்டும். நிலத்தை உழுது சரிசெய்யும் பொழுது 100 கிலோ தழைச்சத்து மற்றும் 50 கிலோ அளவுள்ள தொழு உரம் பயன்படுத்தி நிலத்தை தயார்படுத்த வேண்டும்.
  • சுமார் 20 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்திற்கு கோடுகளை போட்டு அதில் கோதுமை விதைகளை இடவேண்டும். பின்பு களைக்கொத்தி உதவியுடன் மண்ணை கொண்டு அக்குழிகளை மூடி நீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
  • அதிக அளவிலான பராமரிப்பு தேவை இல்லை. 30 – 40 நாட்கள் கழித்து தேவையற்ற களைகளை நீக்கி சுமார் 30 கிலோ அளவுள்ள தழைசத்துக்களை இட்டு நீர் பாய்ச்சினால் போதுமானது.
  • பயிரிட்ட 75 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். நன்கு காய்ந்த நிலையிலுள்ள கோதுமை தாள்களை அறுவடை செய்து அவற்றை நன்கு காயவைத்து கோதுமை மணிகளை பிரித்து எடுக்கவேண்டும். பிரித்தெடுக்கும் முறையை கைகள் மூலமாகவும், இயந்திரம் மூலமாகவும் பிரித்தெடுக்கலாம்.
  • ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டால் 5000 கிலோ அளவு மகசூலை பெறலாம்.
  • இயற்கை தழை உரம், மண்புழு உரம் கலந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் பொழுது நல்ல விளைச்சலை பெறலாம்.
கோதுமையின் பயன்கள்:
  • கோதுமை உடலுக்கு பலத்தை அளிக்க கூடிய தானியம் ஆகும். காய்ச்சல் இருக்கும் பொழுது கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருட்களை உண்ணும்பொழுது இழந்த பலத்தை மீண்டும் பெறலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவாகும்.
  • உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கோதுமை மாவு பசை போல் செய்து அதை கட்டிகள் மேல் வைத்து கட்டும் பொழுது கட்டிகள் குணமாகும்.
  • அஜீரணம் மற்றும் அடிக்கடி ஏப்பம் வருபவர்கள் கோதுமை ரவை கஞ்சி செய்து பருகும் பொழுது உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: தானியங்கள் Tagged With: இயற்கை விவசாயம், கோதுமை

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. முனைவர். கரிகாலன் says

    January 29, 2020 at 4:02 pm

    75 முதல் 90 நாட்கள் தவிர மற்ற நாட்களில் நிலத்தை என்ன செய்வார்கள்

    Reply
    • Navinkumar V says

      January 30, 2020 at 7:02 am

      உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.

      இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
    • மாரிமுத்து.க.பெ says

      June 26, 2021 at 12:14 am

      ஏறக்குறைய மலை பிரதேசங்களில் மானாவாரி பயிராகத்தான் பயிரிடப்பட்டு இருக்கிறது. மற்ற காலங்களில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு இதுபோன்ற பயிர்களை விளைவிப்பர்.

      Reply
  2. அய்யப்பன் says

    December 29, 2020 at 10:54 pm

    தஞ்சாவூர்.திருவாரூர் மாவட்டம் பயிர் செய்ய முடியுமா.

    Reply

Leave a Reply to மாரிமுத்து.க.பெ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog