• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
துளசி

துளசி பயிரிடும் முறை & மருத்துவ பயன்கள்

November 9, 2017 By Navinkumar V 3 Comments


120 Shares
Share120
Tweet
Share
+1

துளசி என்பது ஒரு மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா. அதன் பின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பரவியது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படுகிறது.

ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

இது கோயில் பூஜைகளில் பயன்படுத்தப்படுவதால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் நம் நாட்டில் உண்டு.

எப்படி பயிரிடுவது…?
  • இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • பேசிலிக்கம் இனம்: இச்செடிகள் மிகச்சிறியவைகளாகவும், மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மையுடைய இலைகளுடனும் காணப்படும்.
  • சேங்டம் இனம்: 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்பவைகளாகவோ அல்லது பல்லாண்டுவாழ் குத்துச் செடிகளாகவோ வளருபவை. இலைகளில் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மை இல்லாமலும், சிறிய மலர்கள் உடனும் காணப்படும்.
  • நடவு செய்ய மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உகந்தவை.
  • துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது. அதிக உப்பு, காரத்தன்மை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை.
  • ஒரு ஏக்கருக்கு நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.
  • நிலத்தை நன்கு உழுது தேவையான அளவிற்கு மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளை மணலுடன் கலந்து மார்ச் மாதத்தில் விதைக்க வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். 10 நாட்களில் முளைத்துவிடும்.
  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
  • நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் காணப்படும். அப்பொழுது நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
  • விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50 முதல் 60 செ.மீ இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
  • தண்டுகள் மூலம் சாகுபடி செய்ய துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90-100 சதவிகிதம் முளைத்துவிடும். இதற்கு 8-10 கணுக்கள் மற்றும் 10-15 செ.மீ நீளமுடைய துண்டுகள் தேவைப்படும். முதல் இரண்டு, மூன்று ஜோடி இலைகளைத் தவிர மற்றவற்றை அகற்ற வேண்டும். பிறகு அவற்றை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைகள் அல்லது பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். 4 – 6 வாரங்களில் வேர்கள் பிடித்துவிடும். அவற்றை வரிசைகளுக்கு இடையே 40 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தாவரங்கள் நன்கு வளர ஒரு மாதத்திற்கு வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். பின் 7-10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.
  • ஏக்கருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவிற்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்க வேண்டும். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10 முதல் 15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும்.
  • ஏக்கருக்கு சாம்பல்சத்து 75 கிலோ அளவில் அடியுரமாக இடவேண்டும். நுண்ணூட்டச்சத்துக்களான தாமிரத்தை 50 பி.பி.எம். என்ற அளவில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது.
  • முதல் களையெடுத்தல் நடவு செய்த ஒரு மாதம் கழித்து எடுக்க வேண்டும். அடுத்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக களையெடுக்க வேண்டும். பிறகு செடி வளர்ந்து புதர் போல் மண்ணை மூடி விடும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் களையெடுத்தல் அவசியமாகும்.
  • துளசியில் முதல் அறுவடையை நடவு செய்த 90 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு 75 நாட்களுக்குப் பிறகும் அறுவடை செய்ய வேண்டும். பயிர் நன்கு வளர்ந்த பிறகு 15 செ.மீ அளவிற்கு வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் பயிர் அடுத்த அறுவடைக்கு தயாராகும்.
  • ஒரு எக்டரில் 25-30 டன் தழை மகசூலும், 200 கிலோ எண்ணெய் மகசூலும் கிடைக்கும்.
பயன்கள்
  • தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.
  • துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.
  • துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
  • வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
  • துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.
  • துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.

Filed Under: மூலிகைப் பயிர்கள் Tagged With: துளசி

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. முருகேசன் says

    March 11, 2018 at 6:22 am

    ஐயா
    நான் என் வீட்டில் மாடியில் தோட்டம் அமைத்துள்ளேன் அதில் சில மருத்துவ செடிகள் வைத்து உள்ளேன் எனக்கு மருத்துவ குறிப்புகள் மற்றும் படங்கள் வேண்டும் தர முடியுமா அல்லது கிடைக்குமிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்

    Reply
    • Navinkumar V says

      March 12, 2018 at 5:48 am

      உங்களுடைய ஈமெயில் க்கு அனுப்பி வைக்குறேன் நண்பா.

      Reply

Leave a Reply to முருகேசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog