• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
பாக்கு சாகுபடு முறை மற்றும் பயன்கள்

பாக்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

April 16, 2018 By Navinkumar V 5 Comments


0 Shares
Share
Tweet
Share
+1
  • பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்து பாக்கு பெறப்படுகிறது.
  • பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது.
  • இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது.
  • தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது.
  • இப்பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும், விழாக்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பாக்கு மரம் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

பாக்கு மரம் – மங்களா, சுபமங்களா, மோஹித்‚ சும்ருதி (அந்தமான்), ஹயர்ஹல்லி குட்டை இரகம், வி.டி.எல்.ஏ.ஹச் – 1, 2 மற்றும் தீர்த்தஹல்லி குட்டை இரகம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.

மண்

பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். மண் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம்.

நாற்று தயாரித்தல்

நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுகளைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுகளை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுகளை 30 செ.மீ இடைவெளியில் இரண்டாம் நாற்றங்காலில் நடவு செய்து வளர்க்கவேண்டும். நாற்றுகளுக்கு தொடர்ந்து நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்தல்

அடர்த்தியான, உயரம் குறைவான மற்றும் இலைகள் அதிகமுள்ள நாற்றுகளைத் தேர்வு செய்யவேண்டும். நாற்றுகள் குறைந்தது ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடையவையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாற்றுகளை 90 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும். குழிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 27.5 செ.மீ இருத்தல்வேண்டும். நாற்றுகளின் முக்கால் பாகம் நீளத்திற்கு மண் அணைக்கவேண்டும். நாற்றுகளைத் தென்மேற்குத் திசையிலிருந்து படக்கூடிய சூரிய ஒளியிலிருந்து தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இலைகளில் சூரிய கருகல் உண்டாகும். எனவே நாற்றுகளை நடுவதற்கு முன் தென் மற்றும் மேற்கு திசைகளில் விரைவில் வளரக்கூடிய நிழல் தரும் மரங்களை வளர்க்கவேண்டும். வாழை போன்ற பயிர்களை ஊடுபயிராக நட்டு நிழல் கொடுக்கலாம். ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாக்கு மரம் நன்கு வளர தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நீர் நீர்வாகம்

நவம்பர் – பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், மார்ச் – மே மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

பாக்கு மரம் உரங்கள்

4-ம் மாதம் ஒவ்வொரு மரத்துக்கும் இரண்டு கையளவு சுண்ணாம்புப் பொடி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் மாத இறுதியில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வேப்பிலையைப் பரப்பி, இரு கையளவு தொழுவுரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 9-ம் மாதம் இலைக்கழிவுகளைப் பரப்பி இரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். அதற்குப் பிறகு, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்துக்கும், 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும்.

செயற்கை உரங்களை மரம் ஒன்றுக்கு (5 வயதும் அதற்கு மேலும்) தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். ஐந்து வயதுக்கு குறைவான மரங்களுக்கு குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும்.

பாக்கு மரம் பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மண்வெட்டி கொண்டு கொத்தி களை நீக்கம் செய்யவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

குருத்துப் பூச்சிகள்

அவ்வப்போது, வேப்பம் பிண்ணாக்கு இட்டு வந்தால், பூச்சிகள் தாக்குவதில்லை. குருத்துப் பூச்சிகள் தாக்கினால், இரண்டு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி புகையிலைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும் (அரை கிலோ புகையிலையை நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு, அது ஒரு லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டினால், புகையிலைக் கரைசல் தயார்).

சிலந்திபூச்சி

இதனைக் கட்டுப்படுத்த டைகோபால் 18 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி கலந்து தெளிக்கவேண்டும்.

ஸ்பின்டில் வண்டு

மிதைல் பாரத்தியான் 1.3 D மருந்தை லிட்டருக்கு 2.5 கிராம் (அ) டைமெத்தோயேட் 1.5 மி.லி, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பாளைப்புழுக்கள்

இதனை கட்டுப்படுத்த மிதைல் பாரத்தியான் 20 EC 2 மிலி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நூற்புழு

சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸை மண்ணில் இடுவதன் மூலம் வேர் முடிச்சு நூற்புழு மற்றும் அவரை விதை வடிவ நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.

காய் அழுகல் அல்லது மாகாளி நோய்

நோய் தாக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் 10 சதவீதம் போர்டோக் கலவையை தடவி விடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

அடித்தண்டு அழுகல்

கடுமையாக தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்துவிடவேண்டும். மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோ மண்ணில் இடுவதை தொடர்ந்து 1.5% டிரைடிமார்ஃப்யை 125 மி.லி மூன்று மாத இடைவெளியில் வேர் மூலம் செலுத்த வேண்டும். 1% போர்டாக்ஸ் கலவையை மண்ணில் தெளிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்

1% போர்டாக்ஸ் கலவை (அ) 0.2% டைதேன் M 45 யை இலைவழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பாக்கு விரிசல் நோய்

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் போராக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஒரு வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கையானது பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மகசூல்

சராசரியாக ஒரு எக்டருக்கு 1250 கிலோ வரை கிடைக்கும்.

ஊடுபயிர்

தென்னை மற்றும் பாக்கு ஆகியவற்றை கலப்பு பயிராக பயிரிடலாம்.

பாக்கு மரம் பயன்கள்
  • துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கில் டேனின் என்ற மூலப்பொருள் உள்ளது. மேலும், புரோசைனிடின் என்ற வேதிப்பொருளும் உள்ளன. இவை தனித்த அயனிகளை அழிக்கும் செயல் புரிகின்றன. குறிப்பாக, ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு வேதிம நச்சுக் காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கின்றது.
  • பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
  • குருத்து இலையை இடித்துச் சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்புவலி நீங்கும்.
  • குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை வெகுவாகத் தடுக்கின்றது.

Filed Under: மரங்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Sivakumar.E says

    May 4, 2019 at 6:58 am

    Very good article sir

    Reply
    • Navinkumar V says

      May 29, 2019 at 8:57 am

      Thanks Brother

      Reply
  2. G. Luxmanasri says

    June 3, 2021 at 10:00 am

    very very usefull information sir.
    sir, we can use chicken farm waste for pakku sakupaddy.

    Reply
  3. G. Luxmanasri says

    June 3, 2021 at 10:47 am

    no web site it is home garden in jaffna, Srilankan

    Reply

Leave a Reply to G. Luxmanasri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog