நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் சர்க்கரை கொல்லி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
- விதைகள் அல்லது தாவர துண்டுகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இச்செடி வளர்வதற்கு தொட்டி சற்று அகலமானதாக இருந்தால் நல்லது. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பை மேற்கொள்ள வேண்டும்.
விதைத்தல்
விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும். விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.
பைகளில் நேரடையாகவே துண்டுச் செடிகளை நடவு செய்யலாம். தொட்டியின் அளவைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
சமையலறை கழிவுகளை மட்கச்செய்து உரமாக போடலாம்.
மாதம் ஒருமுறை மண்புழு உரம் இட வேண்டும். இயற்கை உரங்களை இடுவதால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
அறுவடை
இது நீண்ட நாள் தாவரம் என்பதால், தேவைப்படும் பொழுது இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை கொல்லி பயன்கள்:
- வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- உடல் மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.
- எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
- சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.
- குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.
- இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.
Mahesh.KP says
நன்றி