நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் சாமந்தி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti.
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
- வேர்ப்பிடித்த தளிர்கள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை சம அளவு கலந்து வைக்க வேண்டும்.
செடிகள் வளர்ப்பதற்காக உரங்களை பைகளில் நிரப்பும் பொழுது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
வேர் பிடித்த தளிர்களை பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். இதன் வேர் பகுதி முழுவதும் மறையும் படி நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
உரங்கள்
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
நுனிக்கிளையினை ஒடித்து விட வேண்டும். அப்பொழுது தான் பக்கக் கிளைகள் நன்றாக வளரும்.
பயன்படுத்தும் இடங்கள்
இதன் தொட்டிகளுக்கு வண்ணங்கள் பூசினால் அழகாக இருக்கும். இதை முன் வரவேற்பறை அல்லது வாசலின் பக்கவாட்டில் வைக்கலாம்.
பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இந்த செடிகளை படிகளில் வரிசையாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சாமந்தி பயன்கள்
- சாமந்தியானது மூளை காய்ச்சலை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் தன்மை இதில் உள்ளது.
- உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
- சாமந்தி இலைகளை பயன்படுத்தி தோல் அரிப்பு, சிவப்பு தன்மை மற்றும் அக்கி புண்களுக்கான மருந்து தயாரிக்க பயன்படுத்தலாம்.
- சாமந்தி எண்ணெயை படர் தாமரை, அரிப்பு ஆகியவைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
- மெலிந்து இருப்பவர்கள், சோர்வாக இருப்பவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.
- சாமந்தி எண்ணெய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். ஆகவே தழும்புகள் மறைவதற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
Leave a Reply