• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • November 25, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
மாடித்தோட்டத்தில் முருங்கைக்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் முருங்கைக்காய் பயிரிடும் முறை

September 24, 2018 By Navinkumar V 2 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முருங்கைக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

  • 75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • நடுவதற்கு ஏற்ற ஒட்டு நாற்றுகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

முருங்கையில் செடி முருங்கையை டிரம் மூலம் வளர்க்கலாம். இதற்கு டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் சிறிது தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்

செடி முருங்கையை நடுவதற்கு ஒட்டு நாற்றுகளை பயன்படுத்த வேண்டும். நாற்றுகளை தொட்டியில், நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.,

பாதுகாப்பு முறைகள் :

பூச்சிகளை கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும்.

அதிக கிளைகள் வளராதவாறு காவத்து செய்ய வேண்டும். நல்ல திடகாத்திரமான நான்கு கிளைகளை மட்டும் வளரவிட அனுமதிக்க வேண்டும்.

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூ பூக்கும் பருவத்தில் தெள்ளிக வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூச்சி கட்டுப்பாடு

பச்சைப்புழு தாக்குதலின் அறிகுறி

பச்சை புழு முருங்கை மரத்தின் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால் இலை கண்ணாடி போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும்முறை

இயற்கை முறையில் இஞ்சி அரைக்கிலோ, பூண்டு ஒரு கிலோ, பச்சை மிளகாய் அரைக்கிலோ அளவில் எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து ஒட்டு பசை சேர்த்து தெளிக்க வேண்டும்.

அல்லது 50 மில்லி வேப்ப எண்ணெய், 50 மில்லி புங்க எண்ணெய், 50 மில்லி இலுப்ப எண்ணெய், ஒட்டுப்பசையும் சேர்த்துக் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வேர்அழுகல்

அறிகுறி

மரத்தில் உள்ள இலைகள் பழுத்து மரம் வாடிக் காணப்படும். மேலும் இம்மரத்தில் உள்ள காய்கள் சுருங்கி காணப்படும்.. மரத்தின் வேர்ப்பகுதி பாதிக்கப்..படுவதால் காற்று அடித்தால் மரம் ஒடிந்து விடும்.

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், சூடோமோனஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும்..அல்லது

இரசாயன முறையில் கட்டுப்படுத்த

கார்பன்டிசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் செடியின் தண்டுப்பகுதி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.

மரத்தில் பிசின் வடிதல்

அறிகுறி

பழ ஈ, மரம் மற்றும் காயை தாக்கும் பொழுது பிசின் போன்ற திரவம் வடியும் இதனால் காயின் தரம் குறைந்து காணப்படும். விற்பனைக்கு உகந்ததாக இருக்காது ஆகவே வருமானம் பாதிக்கும்.

இவற்றை கட்டுப்படுத்தும் முறை

இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம்.

முக்கிய குறிப்புகள்

2 ½ அடி செடி வளர்ந்த பின்பு செடியின் நுனியை கிள்ளி விட வேண்டும். 20 கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும்.

வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு

நன்கு புளித்த தயிர் 100 மில்லி, பெருங்காயத்தூள் 10 கிராம் (ஒரு டேங்க்) 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்தால் பூ உதிராமல் இருக்கும். அதனால் 20 சதம் வரை மகசூலை அதிகப்படுத்தலாம்.

இரசாயன மருந்துகள் அடிக்கும் பொழுது மாலை வேளையில் தான் தெளிக்க வேண்டும். ஏனென்றால் காலை நேரத்தில் தேன் வண்டுகள் வயலுக்கு வரும். அவை மருந்து தெளிக்கும்போது இறக்க நேரிடும்.

தேன் வண்டுகள் இறந்து விட்டால் மகரந்த சேர்க்கை நடைபெறாது. அதனால் மாலை நேரத்தில் மருந்து தெளித்தால் மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.

நல்ல தரமான காய்களாக உற்பத்தி செய்தால் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

முருங்கையில் விதை உற்பத்தி செய்து விதையாக விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

அறுவடை :

காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இதன் இலை, காய், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதால் அனைவரும் வீட்டிற்கு ஒரு முருங்கைமரம் வளர்த்தல் சிறப்பு.!!

முருங்கையின் பயன்கள்:
  • முருங்கை பூ மற்றும் காயை உண்ணும்பொழுது நியாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும்.
  • முற்றிய முருங்கை விதைகளை காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி, பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூ, முருங்கை இலை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.
  • கர்பிணிப்பெண்கள் மற்றும் தாய்மார்கள் முருங்கை இலை மற்றும் பூக்கள் சாப்பிடும்பொழுது தாய்க்கு அதிக அளவு பால் சுரக்கும்.
  • முருங்கை சாறு முகப்பொலிவும் அழகும் பெற உதவுகிறது.
  • இருமல்,தொண்டைவலி,நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றிற்கு முருங்கை சாறு சிறந்த நிவாரணி ஆகும்.

காண்பதற்கு எளிதாய், வீட்டு புறக்கடையிலும் கூட சரியான கவனிப்பு இல்லாமலிருந்தாலும் கூட காய்த்துத் தள்ளுகின்ற முருங்கையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா?

100 கிராம் காயில் உள்ள சத்துகள்

சக்தி

37 கிலோ கலோரி

மாவுச்சத்து

8.53 கிராம்

நார் சத்து

3.20 கிராம்

கொழுப்பு

0.20 கிராம்

புரதம்

2.10 கிராம்

வைட்டமின்கள்

A

1%

B1

5%

B2

6

B3

4%

B5

16%

B6

9%

B9

170%

நுண் சத்துகள்

கால்ஷியம்

3%

மக்னீஷயம்

13%

மாங்கனீசு

12%

பாஸ்பரஸ்

7%

பொட்டாஷியம்

10%

சோடியம்

3%

துத்தநாகம்

5%

தண்ணீர்

82

Filed Under: மாடித் தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. R.Shantha Murthy says

    September 26, 2018 at 8:17 am

    Really very useful sir. Thank you.

    Reply

Leave a Reply to R.Shantha Murthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) துளசி (2) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (3) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித்தோட்டம் (1) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog