முள்சீத்தாப்பழம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழப்பயிராகும்.
அமேசான் காடுகள் தான் முள் சீதாவின் பிறப்பிடமாகும்.
தற்போது பல வெப்பமண்டல நாடுகளில் பரவி வருகின்றது.,
பிலிப்பைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.
இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகின்றது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
பழங்களின் சுவையைப் பொறுத்து இதய வடிவம், உருண்டை வடிவம், ஒழுகற்ற வடிவம் என்ற மூன்று வகைகளில் காணப்படுகின்றது. பென்னட் என்ற முள்சீத்தாப் பழம் தான் சிறந்த ரகமாகப் போற்றப்படுகிறது.
பருவம்
நல்ல சூரிய வெளிச்சம், நடுத்தர ஈரப்பதம், வெதுவெதுப்பான வெப்பநிலை உலர்ந்த காலநிலை உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முள்சீத்தா நன்றாக வளரும். கார்த்திகை மாதத்தில் நடவு செய்ய வேண்டும்.
மண்
நல்ல வளமான, ஆழமும், வடிகால் வசதியும் கொண்ட செம்மண், கரிசல் மண் வகைகள் ஏற்றது. இது மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 X 2 X 2 அளவுள்ள குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். குழிகளில் தொழு உரம் இட்டு குழிகளை ஆறப் போட வேண்டும்.
விதையளவு
விதை மூலமாகவும், மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் பயிர் செய்யலாம். ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடலாம்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் தெளிவான கன்றுகளை குழியின் மையப்பகுதியில் 5 மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடிகள் நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் போதுமானது.
உரங்கள்
வருடம் ஒரு முறை செடி ஒன்றிற்கு கலப்பு எரு 10 கிலோ இட்டால் போதுமானது. இதையே இரண்டாக பிரித்தும் அளிக்கலாம்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வருடம் ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இதில் பூச்சி தாக்குதல் எதுவும் இருக்காது. இதற்கென தனியாக பாதுகாப்பு முறைகள் தேவையில்லை. வேர் அழுகல் நோய் காணப்பட்டால் மட்டும் குருணை மருந்தை வேர் பகுதியில் வைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
தீவு பகுதிகளில் வருடத்திற்கு மூன்று பருவங்கள் இம்மரம் பூப்பதால், மூன்று முறை அறுவடை செய்ய வேண்டும். மற்றப் பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தாமரம் பூக்கின்றது. ஜுன்-ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
முள் சீதாப் பழங்கள் உருவத்தில் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடை இருக்கும். ஒரு பெரிய பழத்தின் நீளம் சுமார் ஒரு அடியும், அகலம் அரை அடியும் இருக்கும். வடிவத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
பயன்கள்
- சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
- கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
- அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
- இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகவும், இயற்கையின் கொடையாகவும் முள்சீத்தாப்பழம் திகழ்கின்றது.
அ.கதிர் says
தெண்னையில் ஊடுபயிரா எதுலாம் பயிர்யிடலாம் ங்க குறிப்பா பழம் வகைகள் பத்தி சொல்லுங்க … நடவு செய்து இரண்டு வருட தெண்னை மற்றும் 10 வயதான தெண்னை இருக்கு …
Navinkumar V says
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
கோபால் says
முள்ளு சீதா பயிர் செய்வது மலை பகுதியில் மட்டும் தான் சாத்தியமா?