• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
சோற்று கற்றாழை

சோற்று கற்றாழை சாகுபடி மற்றும் மருத்துவ பயன்கள்

November 9, 2017 By Navinkumar V 10 Comments


69 Shares
Share69
Tweet
Share
+1
சோற்றுக் கற்றாழை
  • சோற்று கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
  • கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
  • இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளர்கின்றன. நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
  • அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
எப்படி பயிரிடுவது…?
  • குர்குவா கற்றாழை(Aloe vera), கேப் கற்றாழை(Aloe ferox), சாகோட்ரின் கற்றாழை(Aloe perryi) ஆகிய இரகங்கள் உள்ளன. இந்தியாவில் குர்குவா கற்றாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
  • செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
  • மணல் தவிர்த்து எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். கார அமிலத்தன்மை 7 முதல் 8.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலம் மிகவும் ஏற்றது.
  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். மலைப்பகுதிகளில் மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து கொள்ள வேண்டும்.
  • கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.
  • தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலான பக்கக் கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.
  • பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைக்க வேண்டும். இவ்வாறு நனைத்த பிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம்.
  • செடிகள் செழிப்பாக வளர்வதற்கு செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். மலைச் சரிவுகளில் பாரின் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும்.
  • கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. இறவையாக பயிரிடுவதாக இருந்தால் அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்ப்பாசனம் செய்வது போதுமானது.
  • வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்க வேண்டும். தழைச்சத்து 120 கிலோ உரத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால் அதிகளவு கூழ் மகசூல் கிடைக்கும்.
  • செடிகள் நட்ட ஒரு மாதத்தில் முதல் களை எடுத்து சுற்றி மண் அணைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
  • கற்றாழை செடியில் அதிகமாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி இருக்க வேண்டும்.
  • நடவு நட்ட காலத்திலிருந்து 7- 8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும்.
  • ஒரு ஏக்கரில் இருந்து 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும்.
பயன்கள்
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  • இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
  • கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
  • கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
  • முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.

Filed Under: மூலிகைப் பயிர்கள் Tagged With: சோற்று கற்றாழை

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. A. Soosaimicheal says

    July 4, 2018 at 12:48 pm

    Sir hats off for your service. Great job.

    Reply
    • Navinkumar V says

      July 5, 2018 at 6:36 am

      Thank You

      Reply
  2. Md jabarulla says

    March 17, 2019 at 2:49 pm

    மூலிகை பொருட்களுக்கான சந்தை விபரம் தேவை

    Reply
    • Navinkumar V says

      March 28, 2019 at 12:09 pm

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் என்னை தொடர்புகொள்ளுங்கள். 8050815727

      Reply
  3. joseph ratnarajah says

    May 9, 2019 at 9:39 am

    வணக்கம்
    உங்கள் பதிவுகள் பயனுள்ளவை
    கற்றாளை செடிகளில் ஏற்படக்கூடிய நோய்கள் அல்லது நிறமாற்றம் பற்றிய விளக்கம் இங்கே தர முடியுமா. ஏற்படும் நோய்களை எப்படி நிவர்த்தி செய்வது என்பது பற்றிய விளக்கமும் தருவீர்களா .
    நன்றி

    Reply
    • Navinkumar V says

      May 29, 2019 at 8:56 am

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  4. Lachu says

    November 18, 2019 at 6:26 am

    நான் கற்றாழை ஒரு ஏக்கர் நட விரும்பு கிரேன் எங்கு கிடைக்கும் நாத்து

    Reply
    • Navinkumar V says

      November 22, 2019 at 6:13 am

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  5. M S .Durai says

    April 9, 2021 at 9:01 am

    கற்றாழை மூலிகை பொருட்களுக்கான சந்தை விபரம் தேவை

    Reply

Leave a Reply to joseph ratnarajah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog