• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

April 16, 2018 By Navinkumar V 2 Comments


50 Shares
Share50
Tweet
Share
+1

திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.

தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.

திருநீற்றுப் பச்சிலை என்னும் மூலிகையானது, திருநீற்றுப்பத்திரி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

ஐரோப்பிய வகை, ரீயூனியன் வகை, சின்னமேட் வகை மற்றும் யூஜினால் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து நல்ல வடிகால் வசதியுடன் உள்ள மண் வகைகளில் நன்கு வளரும் தன்மை உடையது.

விதையளவு

ஒரு ஏக்கருக்கு விதைக்க 5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நன்கு உழது சமன் செய்யப்பட்ட நிலத்தில் 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 10-15 செ.மீ உயரமுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும். விதைகளை வரிசையில் 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு நன்கு சலித்த மணல் கொண்டு மேல்பரப்பை மூட வேண்டும். விதைகளை விதைக்கும் முன் மற்றும் விதைத்த பின் நீர் தெளிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் 10-15 நாட்களுக்குள் முளைத்து விடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 20 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவில் பாத்திகளை அமைக்கவேண்டும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள நடவு வயலில் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைகளுக்கிடையே 75 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கிடையே 30 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அடியுரமாக இட வேண்டும். மூன்றாவது மாதத்தில் 50 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நட்ட 20 முதல் 25 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

நாற்றுகளின் நுனியை அதாவது முதல் பூவைக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடியின் பக்க வளர்ச்சி அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு

இந்த மூலிகை செடியில் பொதுவாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை

நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி பின்பு சேமித்து வைக்கவோ, எண்ணெய் எடுக்கவோ பயன்படுத்தலாம்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 13-14 டன் இலைகள் மகசூலாக கிடைக்கும்.

பயன்கள்
  • பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் அடங்கி உள்ளன.
  • காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
  • இதன் இலையை கசக்கி அதன் சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும்.
  • நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.
  • இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சனைகள் குணமாகும்.

Filed Under: மூலிகைப் பயிர்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Siva priya says

    April 10, 2020 at 6:54 am

    ஐயா வீட்டு உபயோகத்திற்கு
    தீருநீற்றுபச்சிலை செடி தேவை
    கிடைக்குமா

    Reply

Leave a Reply to Siva priya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog