• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
முந்திரி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

முந்திரி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 24, 2018 By Navinkumar V 10 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

முந்திரி அல்லது மரமுந்திரி என்பது அனகார்டிசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும்.

இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.

முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

விதையளவு

ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.

உரங்கள்

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான்

இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.

5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.

தேயிலைக்கொசு

தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் துளைக்கும் புழு

இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

வேர்த் துளைப்பான்

ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆந்தராக்னோஸ்

இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.

நுனிக்கருகல்

நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.

அறுவடை

கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.

மகசூல்

ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.

பயன்கள்
  • முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
  • முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
  • முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
  • முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.

Filed Under: இதர சாகுபடி

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. மனுவேல் says

    July 12, 2018 at 8:51 am

    தங்களின் விவசாய குறிப்புகள் பயனுள்ளவை.

    Reply
    • Navinkumar V says

      July 15, 2018 at 4:03 pm

      நன்றி. தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்

      Reply
      • பாவாணன் says

        April 13, 2020 at 7:26 am

        வணக்கம்….
        முந்திரி மரம் நிலவளத்தை பாதிக்குமா?
        தைல மரத்தை போல் நிலத்தடி நீரை உறிஞ்சுமா?

        Reply
  2. a.asaraf ali says

    November 1, 2018 at 8:24 am

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி …

    Reply
  3. கைலாஷ் says

    November 26, 2018 at 6:03 pm

    மிகவும் அருமையான விபரம் தங்களுக்கு நன்றி

    Reply
  4. Manavalan says

    November 8, 2019 at 6:23 am

    நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயணுல்ளதாக இருந்து… மிக்க நன்றி

    Reply
  5. கவியோகி வேதம் says

    November 20, 2019 at 11:28 am

    என்னருமை நண்பரே,
    ஆசிகள்.இன்னும் எனக்குத் தெளிவாக வில்லை. அந்த முந்திரிக்கொட்டையைமட்டும் தனியாக எடுத்து வெயிலில் உலர்த்திப் பின்பு உர மண்ணில் இட்டால் போதாதா> முளைக்காதா செடி?
    அது என்ன ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.?
    விளக்கவும். கொட்டை விதையில்லையா.?
    கவியோகி வேதம்

    Reply
    • Navinkumar V says

      November 22, 2019 at 6:14 am

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  6. ராஜா says

    June 12, 2020 at 1:18 am

    ஏக்கர் ஒன்றுக்கு அடர் நடவு எனில் 180 மரக்கன்றுகள் நடலாம். கொஞ்சம் இடைவெளி விடும்போது 100 முதல் 120 வரை நடலாம். இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால், மரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 120 கிலோ வரை முந்திரக்கொட்டை எடுக்க முடியும். சாதாரணமாகப் பராமரிப்பு இல்லாத மரம் 20 கிலோ மட்டுமே காய்க்கும்”

    Reply

Leave a Reply to Navinkumar V Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog