• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • June 8, 2023

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா

எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா

April 11, 2020 By Navinkumar V 20 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

காற்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும்.

நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்

ஜனவரி: (மார்கழி, தை)

கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு

பிப்ரவரி: (தை,மாசி)

கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி

மார்ச்: (மாசி, பங்குனி)

வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரி

ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)

செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம்

மே: (சித்திரை, வைகாசி)

செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம்

ஜூன்: (வைகாசி, ஆனி)

கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, கொத்தவரை, தென்னை

மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்

ஜூலை: (ஆனி, ஆடி)

மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு

ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி)

முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை

செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி)

செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி

அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி)

செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி

நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை)

செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி

டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி)

கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்

மானியம் :-

தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் துறை மூலமாக உதவிகளைப் பெற்று சீரிய முறையில் காய்கறி உற்பத்தி செய்ய தங்கள் ஒன்றியத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு :-

எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.

நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.

Filed Under: காய்கறிகள், கீரைகள், பூக்கள், மாடித் தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. KANAGARAJ T says

    April 16, 2020 at 6:19 am

    Oru mango try vachi kaapatha mudila ji Enakey asingama iruku sethuruthu epdi vaikalam

    Reply
    • Ariv says

      April 22, 2020 at 10:52 am

      Neenga atha entha mathiri place la vachinga

      Reply
    • Navinkumar V says

      December 10, 2022 at 4:28 am

      பல காரணங்கள் இருக்கலாம். அதிக தண்ணீர் விட்டு இருந்தால் வேர் அழுகி இருக்கலாம் , அல்லது அதிக உரங்களை சிறு செடிக்கு இட்டு இருக்கலாம். எனவே இன்னோரு முறை முயற்சிக்கவும்

      Reply
  2. அனிதா says

    April 16, 2020 at 3:02 pm

    கேழ்வரகு நடவு எப்பொழுது சிறந்தது

    Reply
  3. Ariv says

    April 22, 2020 at 10:51 am

    தை.மாசி

    Reply
  4. Manju says

    April 23, 2020 at 6:47 am

    ஆமணக்கு விதை எப்போது பயிரிடலாம்

    Reply
  5. Pradap says

    May 10, 2020 at 5:08 am

    கத்தரியில் தண்டு துளைப்பான் கட்டுபடுத்துவது எப்படி

    Reply
    • Deva says

      December 7, 2021 at 3:10 am

      ஒரு செடி கிளை இன்னொருசெடி கிளையில் ஒட்டாதவாறு இடை இடைவெளி இருந்தாலே தண்டு துளைப்பான் போன்ற எந்த ஒரு நோயும் வர வாய்ப்பு குறைவு

      Reply
  6. Sathya says

    May 18, 2020 at 2:08 am

    Namudaiya nattu vidhaikal engage kidaikum endru post panunga for all kinds of vegetables and rice

    Reply
    • Navinkumar V says

      December 10, 2022 at 4:25 am

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்

      Reply
  7. மணிகண்டன் says

    June 19, 2020 at 3:41 am

    நான் முல்லை பூச்செடி 500 செடிகள் இரண்டு வருடங்களாக வளர்த்து வருகிறேன் ஆனால் செடிகள் வளர்ச்சி இல்லை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது மற்றும் பூக்கள் அதிகமாக வரவில்லை மண் கரிசல் மண் மருந்து கடைகளில் கேட்டால் மண்ணில் இரும்புச்சத்து இல்லை என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன தீர்வு உரங்களும் முப்பது நாளைக்கு ஒருமுறை வைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் செடிகள் பிரச்சினையா மண் பிரச்சினையா என்று தெரியவில்லை

    Reply
    • Deva says

      April 14, 2022 at 1:31 pm

      பழைய கிளைகளை பாதியில் வெட்டி விட்டு (கவாத்து) உரம் வைத்து இருநாளுக்கொருமுறை நீர் பாய்ச்சுங்கள். முதிர்ந்த இலைகள் கூட மஞ்சள் கலராக மாறி மொட்டு விடும் திறனை பாதிக்கலாம்.

      Reply
  8. Vetrivel says

    June 22, 2020 at 1:55 am

    எங்கள் வீட்டு பகுதிகளில் எலுமிச்சை செடி வருவதேயில்லை….please help me…

    Reply
    • Navinkumar V says

      December 10, 2022 at 4:24 am

      வளர்வது இல்லையா? என்ன வகை மண் என்று கூறுங்கள்

      Reply
  9. இளவரசன் says

    August 10, 2020 at 5:30 am

    என்னோட 40 நாள் கத்தரி தோட்டம் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி அனைத்தும் இறந்துவிட்டது.
    இந்த மழை காலத்திற்கு ஏற்ற பயிர் வகைகள் இருந்தால் சொல்லுங்க..
    விவசாயம் எனது புது முயற்சி..
    எனவே உங்கலுடைய ஆலோசனை வேண்டும்.

    Reply
    • Deva says

      December 7, 2021 at 3:13 am

      செடி வகைகள் அல்லாது புல் வகை நெல், கேழ்வரகு சோளம் இவைகள் தாங்கும்

      Reply
  10. Thulasi says

    December 23, 2020 at 2:33 pm

    மருத்துவ தாவர மார்கேட்டிங் கிடைக்குமா என்று சொல்லுங்க என்றும் விவசாயிகளின் ஒருவன்.. நன்றி

    Reply
    • Navinkumar V says

      December 10, 2022 at 4:23 am

      என்னென்ன தாவரங்கள் உங்களிடம் உள்ளது

      Reply
  11. Sathya says

    May 9, 2022 at 3:57 pm

    பூசணியில் ஊடு பயிர் செய்ய முடியுமா.

    Reply
    • Navinkumar V says

      December 10, 2022 at 4:22 am

      ஆங்காங்கே வாழை வைத்து கொள்ளலாம். பக்கக்கன்றுகள் இல்லாமல்

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (7)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (3)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (47)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (7)
  • விவசாய புகைப்படங்கள் (2)

Recent Posts

  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 2)
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 1)
  • புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவரம் இதோ
  • மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com
Phone: (+91) 80508 15727
Fax: (+91) 99432 12913

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2023 by Agriculture Trip. Developed by Navinblog